/* */

மாற்றுத்திறனாளிகள் கபாடி போட்டியில் தமிழக வீரர்கள் தங்கம் வென்று சாதனை

தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகள் கபாடி போட்டியில் தமிழக வீரர்கள் தொடர்ந்து மூன்று முறை தங்கம் வென்று சாதனை.

HIGHLIGHTS

மாற்றுத்திறனாளிகள் கபாடி போட்டியில் தமிழக வீரர்கள் தங்கம் வென்று சாதனை
X

மாற்றுத்திறனாளிகளுக்கான கபாடி போட்டியில் தங்கம் வென்ற தமிழக அணியினர்.

தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகள் கபாடி போட்டியில் தமிழக வீரர்கள் தொடர்ந்து மூன்று முறை தங்கம் வென்று சாதனை. நான்காவது முறையும் தங்கம் வெல்வோம் என நம்பிக்கை. பயிற்சி பெற அடிப்படை வசதிகள் இல்லாததால் தொடர்ந்து விளையாட சிரமம்.

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கபடி அணிவீரர்கள் இராமநாதபுரத்தில் கடற்கரையில் பயிற்சி மேற்கொண்டனர். இராமநாதபுரம்,சேலம், திருநெல்வேலி, கரூர், திருச்சி, பெரம்பலூர்,மதுரை, செங்கல்பட்டு உள்ளிட்ட சுமார் 16 மாவட்டங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கபடி அணியில் இடம்பெற்றுள்ளனர். தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகள் கபாடி போட்டியில் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளனர்.

தமிழ்நாடு, பாண்டிச்சேரி, மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி, சண்டிகர், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 14 மாநிலங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கபாடி வீரர்களுக்கான போட்டிகள் கர்நாடக மாநிலம் மங்களூரில் கடந்த ஆண்டு நடைபெற்றது.இப்போட்டியிலும் பெங்களூர், சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்ற தேசிய அளவிலான கபாடி போட்டி யிலும் 14 மாநிலங்களையும் வெற்றி பெற்று தமிழக மாற்றுத்திறனாளி கபாடி அணியினர் தேசிய அளவில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளனர். இவர்கள் தற்போது இராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூர் கடற்கரையில் பீச் பயிற்சியில் ஈடுபட்டனர்.மேலும் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வருகின்ற 30ஆம் தேதி மற்றும் மே 1தேதி என இரண்டு நாட்கள் தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான கபடி போட்டி நடைபெறுகிறது. இதில் மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட 14 மாநிலங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கபடி வீரர்கள் பங்கேற்கின்றனர்.

இதுதொடர்பாக மாற்றுத்திறனாளி கபடி வீரர்கள்கூறுகையில்: தமிழ்நாடு மாற்றுத்திறனாளி கபடி அணி வீரர்கள் பல்வேறு போட்டிகளில் சிறப்பாக தங்களது திறமைகளை வெளிக்காட்டி வெற்றி கண்டுள்ளோம். கடந்த மூன்று முறை நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்று தமிழ் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளோம். சென்னையில் நடைபெறக்கூடிய நான்காவது தேசிய அளவிலான போட்டியிலும் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றுவோம்.மேலும் தாங்கள் முறையாக பயிற்சி மேற்கொள்வதற்கும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்வதற்கு பொருளாதார பிரச்சினைகள் இருப்பதால் தமிழக அரசும் பல்வேறு தன்னார்வலர்கள் தொண்டு நிறுவனங்களும் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். பயிற்சி பெறுவதற்கு முறையான அடிப்படை கட்டமைப்புவசதிகளையும், வாழ்வாதார முன்னேற்றத்திற்கு அரசு வேலைவாய்ப்பையும் பெற்று கொடுத்தால் தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கும் வகையில் விளையாட்டு போட்டியில் பல்வேறு சாதனைகள் படைக்க உள்ளதாக தெரிவித்தனர்.எனவே தமிழக முதல்வர் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு உதவிகள் செய்வது போல் தமிழக மாற்றுத்திறனாளி கபடி அணிக்கும் உதவிகள் செய்து தங்களுடைய விளையாட்டினை ஊக்குவித்து தங்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னதாக கடற்கரை பயிற்சிக்கு பின்பு தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கபாடி சங்கத்தின் சிறப்பு ஆலோசகர் பாக்கியநாதன், சங்கத்தின் செயலாளர் ரமேஷ் கண்ணா,பொருளாளர் செந்தில்குமார், கேப்டன் மகேஷ் உள்ளிட்ட அணி வீரர்கள் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கர்லால் குமாவத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று தங்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கும்படி கோரிக்கை விடுத்தனர் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்ற மாவட்ட ஆட்சித் தலைவருடன் பேசி தமிழக அரசிடமும் பேசி நியாயமான கோரிக்கையை கண்டிப்பாக நிறைவேற்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Updated On: 10 April 2022 8:38 AM GMT

Related News