Begin typing your search above and press return to search.
பெரம்பலூர்: மின் வேலியில் சிக்கி பசுமாடு உயிரிழப்பு!
பெரம்பலூர் அருகே நெல் வயலில் பொருத்தப்பட்ட மின் வேலியில் சிக்கி பசு மாடு பரிதாபமாக உயிரிழந்தது.
HIGHLIGHTS
பெரம்பலூர் மாவட்டம் தொண்டமாந்துறை விஜயபுரம் கிழக்கு பூஞ்சோலை பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுதுரை. இவர் மாடுகளை வளர்த்து வருகிறார்.
இந்தநிலையில் இவருக்கு சொந்தமான பசு மாடு ஒன்று, இவருடைய வயலுக்கு அருகில் உள்ள வெங்கடேசன் என்பவரது நெல் வயலில் பொருத்தப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி உயிரிழந்தது.
இது தொடர்பாக அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து வருகின்றனர்.