/* */

பெரம்பலூரில் தொடர்ந்து ஆடுகள் திருட்டு: கண்டுபிடிக்கக்கோரி எஸ்பி.,யிடம் மனு

பெரம்பலூர் மாவட்டத்தில் காணாமல் போன செம்மறி ஆடுகளை கண்டுபிடித்து தரக்கோரி எஸ்பி., அலுவலகத்தில் விவசாயி ஒருவர் மனு அளித்தார்.

HIGHLIGHTS

பெரம்பலூரில் தொடர்ந்து ஆடுகள் திருட்டு: கண்டுபிடிக்கக்கோரி எஸ்பி.,யிடம் மனு
X

பைல் படம்.

கடந்த சில மாதங்களாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தெற்கு மாதவி, வரகுபாடி , சிறுகன்பூர், பாடாலூர் போன்ற பல்வேறு கிராமங்களில் மர்ம நபர்கள் ஆடுகளைத் திருடி சம்பவம் பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத்தொடர்ந்து எளம்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் கிடை அமைத்து 50 க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று தனது வீட்டின் அருகே உள்ள கிடையில் 22 செம்மறி ஆடுகள் காணாமல் போனது. காணாமல் போன செம்மறி ஆடுகளை கண்டுபிடித்து தரக்கோரி பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதுவலகத்தில் செல்வராஜ் மனு அளித்தார்.

Updated On: 6 Sep 2021 12:13 PM GMT

Related News