/* */

கோவிலில் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்முறை

கோவிலில் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்முறை
X

நாகப்பட்டினத்தில் பெண் ஒருவர், கோவிலில் வைத்து கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளான கொடூரம் நிகழ்ந்துள்ளது.

நாகப்பட்டினம் வெளிப்பாளையம் நாகதோப்பு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கணவர் இல்லாத நிலையில் தனியாக வசித்து வந்தார். கட்டிட கூலி வேலைக்கு அந்த பெண் சென்று வந்துள்ளார். தனியாக வசித்து வந்த இவர் இரவு நேரத்தில் அவரது சகோதரி வீட்டிற்கு சென்று தங்குவது வழக்கம். அது போல் நேற்று இரவு சகோதரி வீட்டுக்கு செல்லும் வழியில் ஒரு சில இளைஞர்கள் அந்த பெண்ணை வாயை பொத்தி அருகே இருந்த கோவிலுக்கு இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி உள்ளனர்.

இதில் பாதிக்கப்பட்ட அந்த பெண் உடல் நலம் பாதித்து நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் காமராஜ் நகரில் உள்ள அந்த பெண்ணின் சகோதரி வீட்டிற்கு சென்ற மர்ம நபர்கள் இதுபற்றி புகார் கூறக்கூடாது என்று கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர். இதுகுறித்து வெளிப்பாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு சந்தேகத்திற்கிடமான வகையில் 2 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 8 Jan 2021 5:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  4. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  6. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  7. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  9. வீடியோ
    ஆன்மிகம் கை கொடுக்கும்!படத்தை பார்த்தா என்ன கிடைக்கும்?...
  10. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை