கடலூர் அருகே கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 2 இளைஞர்கள் பலி
கடலூர் அருகே பழுதடைந்த கட்டிட சுவர் இடிந்து விழுந்த விபத்தில் இளைஞர்கள் 2 பேர் இறந்தனர்.
HIGHLIGHTS
கடலூர் அருகே எஸ் புதூர் கிராமத்தில் சமத்துவபுரம் குடியிருப்பு பின்புறம் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வுக்கு வீடுகள் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் கட்டி கொடுக்கப்பட்டது.
அந்த வீடுகள் சரியில்லை என்றும், நகர் புறத்திற்கு வெகு தொலைவில் இருப்பதால் அதில் இலங்கை தமிழர்கள் குடியேற மறுத்து விட்டனர். இந்த நிலையில் கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக பாழடைந்து இருந்த அந்த கட்டிடத்தின் அருகில் இருந்த மூன்று 17 வயது சிறுவர்கள் மீது திடீரென சுவர் இடிந்து வுழுந்தது. இதில் வீரசேகரன், சுதீஷ் குமார், ஆகியோர் உயிரிழந்தனர். புன்வேஷ் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக அவர் புதுச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த விபத்து குறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் அரசு மருத்துவமனையில் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபோன்று மற்றொரு சம்பவம் நடைபெறாமல் இருக்க பல ஆண்டுகளாக பல ஆண்டுகளாக புதர் பட்டி பயன்பாடின்றி கிடக்கும் கட்டிடத்தை அப்புறப்படுத்தி தரவேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.