/* */

ஓட்டேரியில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி

ஓட்டேரியில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலியானான்.

HIGHLIGHTS

ஓட்டேரியில்  குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி
X

சென்னை ஓட்டேரி பிரிஸ்னி நகர் 4வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்துரை இவரது மூத்த மகன் தனுஷ் வயது 16 இவர், பனந்தோப்பு ரயில்வே காலனி பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். சின்னதுரையின் இரண்டாவது மகன் காமேஷ் வயது,13, நேற்று மாலை 4 மணி அளவில் தனுஷ் காமேஷ் மற்றும் இவர்களது உறவுக்கார சிறுவன் வினித் ஆகிய 3 பேரும் பனந்தோப்பு ரயில்வே காலனி 1வது தெருவில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்றனர்.

அப்போது, தனுஷ் நீரில் மூழ்கி வெகுநேரமாக வெளியே வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற இரண்டு சிறுவர்களும், உடனடியாக வீட்டிற்கு ஓடிச்சென்று தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த உறவினர்கள், தேடி பார்த்தும் தனுஷ் கிடைக்காததால் உடனடியாக இதுகுறித்து ஓட்டேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த ஓட்டேரி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, இதுகுறித்து வியாசர்பாடி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் அங்கு வந்த வியாசர்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் பால நாகராஜ் தலைமையிலான குழுவினர், தண்ணீரில் இறங்கி தீவிரமாக தேடினர். ஒரு மணிநேரம் கழித்து தண்ணீரில் மூழ்கிய தனுஷ் சடலமாக மீட்கப்பட்டார். ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தனுஷின் உடலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 29 Dec 2021 8:51 AM GMT

Related News