/* */

அரியலூர் கொரோனா சிறப்பு மையங்களில் அடிப்படை வசதிகள்: கண்காணிப்பு அலுவலர்

அரியலூர் கொரோனா சிறப்பு மையங்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று கண்காணிப்பு அலுவலர் கூறினார்.

HIGHLIGHTS

அரியலூர் கொரோனா சிறப்பு மையங்களில் அடிப்படை வசதிகள்: கண்காணிப்பு அலுவலர்
X

அரியலூர் சிறப்பு கொரோனா முகாம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்த.ரத்னா முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தஸ்ரீரமேஷ் சந்த் மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் சிகிச்சை வசதிகளுக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, திடீர்குப்பம் ஆதிதிராடவிர் மாணவியர் விடுதி, ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் கழுவந்தோண்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளிட்டவைகளில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைப்பதற்கான முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்த.ரத்னா முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் தஸ்ரீரமேஷ் சந்த் மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தெரிவிக்கையில், அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் தகுதியான அனைவருக்கும் கிராமங்கள் தோறும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தும் பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன.

இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்ட அனைத்து இடங்களிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் நபர்களின் அடிப்படை வசதிகளுக்காக கழிப்பறை, மின்வசதி, குடிநீர் வசதி உள்ளிட்டவைகள் போர்கால அடிப்படையில் நிறைவேற்றிட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஸ்ரீரமேஷ் சந்த் மீனா தெரிவித்தார்.




Updated On: 15 May 2021 5:23 AM GMT

Related News