/* */

விளையாட்டு போட்டிகளில் வெற்றிப்பெற்ற காவலர்களுக்கு எஸ்பி பாராட்டு

மாநிலஅளவில் விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற அரியலூர்மாவட்ட காவலர்களை மாவட்ட எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா பாராட்டினார்

HIGHLIGHTS

விளையாட்டு போட்டிகளில் வெற்றிப்பெற்ற காவலர்களுக்கு எஸ்பி பாராட்டு
X

மாநில அளவில் நடைபெற்ற காவலர்களுக்கிடையேயான விளையாட்டு போட்டிகளில் அரியலூர் மாவட்டத்திலிருந்து பங்கேற்ற வெற்றி பெற்ற காவலர்களை பாராட்டுகிறார் அரியலூர் எஸ்பி கே.பெரோஸ்கான் அப்துல்லா


மாநில அளவில் நடைபெற்ற காவலர்களுக்கான விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற அரியலூர் மாவட்ட காவலர்களை மாவட்ட எஸ்பி கே.பெரோஸ்கான் அப்துல்லா பாராட்டினார்.

மாநில அளவில் காவல்துறையினருக்கு இடையே நடைபெற்ற 2021-2022 க்கான விளையாட்டுப் போட்டிகளில், மத்திய மண்டல காவல்துறை சார்பாக கலந்து கொண்ட அரியலூர் மாவட்ட காவலர்கள் மல்யுத்தம், யோகா, சைக்கிளிங், பளு தூக்குதல், கபடி ஆகிய விளையாட்டுகளில் தங்கம்-1, வெள்ளி-3, வெண்கலம்-11 என 15 பதக்கங்களை பெற்றனர். இந்நிலையில், வெற்றி பெற்ற காவல்துறை விளையாட்டு வீரர்களை மாவட்ட எஸ்பி கே.பெரோஸ்கான் அப்துல்லா, தனது அலுவலகத்துக்கு அழைத்து பாராட்டினார். உடன் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் பத்மநாபன் உள்ளிட்டோர் இருந்தனர்.


Updated On: 12 March 2022 12:01 PM GMT

Related News