Begin typing your search above and press return to search.
மே தினத்தன்று அரியலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
அரியலூர் மாவட்டத்தில் இயங்கிவரும் டாஸ்மாக் கடைகளுக்கு மே தினத்தை முன்னிட்டு மே1ம்தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அரியலூர் மாவட்டத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான சில்லறை விற்பனைகடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக் கூடங்கள் அனைத்தும் மே தினத்தை முன்னிட்டு 01.05.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.