/* */

siruvapuri shri balasubramaniaswamy temple-சொந்த வீடு வாங்கறீங்களா..? அப்ப சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு போங்க..!

siruvapuri shri balasubramaniaswamy temple-சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலைப் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.

HIGHLIGHTS

siruvapuri shri balasubramaniaswamy temple-சொந்த வீடு வாங்கறீங்களா..? அப்ப சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு போங்க..!
X

siruvapuri shri balasubramaniaswamy temple-ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட எங்கள் வாசகர்களுக்காக அவ்வப்போது கோவில்கள் பற்றி எழுதி வருகிறோம். அந்த வகையில் இன்று சிறுவாபுரி பாலசுப்ரமணிய ஸ்வாமி பற்றி அறிந்துகொள்வோம்.


எங்கே உள்ளது?

siruvapuri shri balasubramaniaswamy temple-சரியாக சென்னைக்கு வட மேற்கே சென்னை- கல்கத்தா நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து சுமார் 33-வது கிலோமீட்டரில் இடதுபக்கம் (மேற்கே) பிரியும் சாலையில் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமியின் தோரண வாயில் நம்மை வரவேற்கிறது.

இந்தத் தோரண வாயிலில் இருந்து மேற்கே 3 கிலோ மீட்டர் தொலைவில் சின்னம்பேடும் என தற்போது அழைக்கப்படும் சிறுவாபுரி பாலசுப்பிரமணியப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

சிறுவாபுரியின் நுழைவாயிலில் சப்த மாதர் கோவில், நடுநாயகமாக அகத்தீஸ்வரர் கோவில் மேற்கே பெருமாள் கோவில் பெருமாள் கோவிலுக்குப் பின்னால் விஷ்ணுதுர்கை கோவில்கள் உள்ளன.வடக்கே வாயு மூலையில் சிறுவாபுரி பாலசுப்ரமண்ய சுவாமி ஆலயம் கம்பீரமாக நம் கண்ணுக்கு காட்சி தருகிறது. அருணகிரி நாதரால் போற்றிப் பாடப்பட்ட தலம் சிறுவாபுரி.

இங்குள்ள விக்கிரகங்களில் பாலசுப்ரமண்யர், ஆதி மூலவர், நவகிரகம் தவிர மற்ற விக்கிரகங்கள் அனைத்தும் மரகதப் பச்சைக்கல்லால் ஆனவை என்பது இந்த ஆலயத்துக்கான சிறப்பு. கோவிலுக்குள் உயரமான கொடிமரத்தின் முன் காணப்படும் பச்சை மரகத மயிலின் காட்சி மனதை கொள்ளை கொள்ளும். மனதை மயக்கும் அழகுக்காட்சி. இது போன்ற சிறந்த வடிவமைப்பை வேறு எங்கும் காண்பது அரிது.


siruvapuri shri balasubramaniaswamy temple

சிறுவாபுரி முருகன் முன் வலக்கரம் அடியவருக்கு அபயம் அளிக்க, பின் வலக்கரம் ஜபமாலை ஏந்தியிருக்க முன் இடக்கரம் இடுப்பிலும் பின் இடக்கரம் கமண்டலமும் தாங்கி பிரம்ம சாஸ்தா கோலத்தில் இருக்கிறார். பிரம்மனை தண்டித்து பிரம்மனின் படைப்புத் தொழிலை ஏற்றக் கோலம் கொண்ட இம்முருகனை வழிபட்டால் வித்தைகள் பல கற்ற பேரறிஞர் ஆகலாம் என்று அருணகிரிநாதர் பாடியுள்ளார்.

வாஸ்து அதிபதியான பிரம்மாவை தண்டித்து படைப்புத் தொழிலை ஏற்றக் கோலத்தில் காட்சி அளிப்பதால் இவரை வழிபடுவதால் வாஸ்து தோஷம் நீங்கி, வீடு கட்டுவதில் இருக்கும் பல தடைகள் விலகும் என்பது நம்பிக்கை.

தலபுராணம்:

அசுவமேத யாகம் செய்ய விரும்பிய ராமபிரான் யாகப்பசுவாக குதிரையை ஏவிவிட அது வால்மீகி முனிவரின் ஆஸ்ரமத்தின் அருகில் வந்தது. அதை அங்கு வளர்ந்து வந்த ராமனின் பிள்ளைகளான லவனும் குசனும் கட்டிப்போட்டு விட்டனர். இதை அறிந்து குதிரையை மீட்டுப் போக வந்த லட்சுமணனாலும் சிறுவர்களை வெல்ல முடியவில்லை. ராமனே நேரில் வந்து சிறுவர்களிடம் போரிட நேர்ந்தது. இவ்வாறு சிறுவர்களான லவனும் குசனும் அம்பு விட்ட இடமே சிறுவாபுரி என்று வரலாறு கூறுகிறது.

siruvapuri shri balasubramaniaswamy temple


கோவில் நடை திறக்கும் நேரம்

சிறுவாபுரி கோவில் ஞாயிறு தோறும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை திறந்து இருக்கும். பிறகு பிற்பகல் 4 மணி முதல் 8 மணி வரை நடைதிறந்து இருக்கும்.

செவ்வாய்கிழமைகளில் அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை வழிபாடு செய்யலாம். மற்ற நாட்களில் காலை 7.30 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தான் வழிபாடு செய்ய முடியும்.

மணக்கோலத்தில் காட்சி தரும் இது போன்ற சிலை வேறு எங்கும் கிடையாது. இந்த முருகப்பெருமானை வணங்குவோருக்கு திருமணத்தடை நீங்கி மனம் போல துணை அமையும் என்பது ஐதீகம்.

siruvapuri shri balasubramaniaswamy temple


பூமி பிரச்னைகள் தீரும்

பூமி சம்பந்தமான அனைத்து கோரிக்கைகள் நிறைவேறவும், வீடு இல்லாதவர்களுக்கு புதிய வீடு அமையவும், பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் பிள்ளைப்பேறு பெறவும், கடன் தொல்லைகள் தீரவும், சிறுவாபுரி சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது. நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்தவர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறி வருவது நிதர்சன உண்மையாகும்.

Updated On: 8 Dec 2022 7:21 AM GMT

Related News