/* */

வாழ்க்கையை வெற்றிகொள்ள ஊக்கமளிக்கும் அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்

Life Motivational Quotes in Tamil-நாம் எடுக்கும் முயற்சிகளின் முன்னெடுப்புகள் மட்டுமே வெற்றிக்கான காரணிகளை தீர்மானிக்கிறது. அதற்கு தன்னம்பிக்கை அவசியம்.

HIGHLIGHTS

வாழ்க்கையை வெற்றிகொள்ள ஊக்கமளிக்கும் அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
X

life motivational quotes in tamil-உத்வேகம் கொள்ளல்(மாதிரி படம்)

Life Motivational Quotes in Tamil

வாழ்க்கையில் துவண்டுவிடாமல் தாங்கிப்பிடிப்பது நமது நம்பிக்கை மட்டுமே. அந்த நம்பிக்கையே வாழ்க்கையில் பலருக்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளது. அந்த வகையில் இங்கு புத்துணர்ச்சி பெரும் நம்பிக்கை தரும் மேற்கோள்கள் இங்கு தரப்பட்டுள்ளன. படித்து நம்பிக்கை பெறுவோம்.வாழ்வில் வெற்றியடைவோம்.

1. நாம் நம்பும் னது உறவினர் அல்லது நட்புகளின் கைகள் கைவிடலாம் ஆனால் நம் நம்பிக்கை கைவிடாது.

2. நம்பிக்கை என்பது ஒரு சிறு நூல் இழை தான். அதுதான் அன்பு எனும் உறவை பிணைத்துள்ளது.

3. துயரங்களின் ஆறாத புண்களைக்கூட ஆற்றிவிடும் சக்தி, காலத்திற்கு மட்டுமே உள்ளது. நம்பிக்கையுடன் செயல்படுவோம்.

4. முயற்சிகள் தோற்றுப் போகிறதா? தளர்ந்து விடாதே... மீண்டும் கடந்து வா நம்பிக்கையுடன்! விதை கூட மண்ணில் விழுந்துதான் எழுகிறது. தோல்விகள் கூட தோற்றுப் போகும், நம்பிக்கை இருந்தால்!

5. கடைசி வரை நம்பிக்கை இழக்காதே, ஏனெனில் கடைசி வரியில் கூட உனக்கான வெற்றி எழுதப்பட்டிருக்கலாம்!

6. தோற்காமல் வென்றவர்கள் யாரும் இல்லை; தோற்று விட்டோம் என்று கவலைப்படாமல் தோல்விக்கான காரங்களை அலசு வெற்றி நிச்சயம்.

7. நீ உன் சிறகை விரித்தால் மட்டுமே , நீ பறக்கும் உயரத்தை நீ அறிவாய்

8. கடினமான செயலின் சரியான பெயர் தான் சாதனை. சாதனையின் தவறான் விளக்கம் தான் கடினம்!

9. தொட முடியாத உயரத்தில் உன் கனவுகள் இருந்தாலும், தொட்டுவிட முடியும் என்று நம்பிக்கை கொள்

10. மனதில் வலிமை இருந்தால், வலிகள் வெறும் கானல் நீர்தான்!

11. எதுவாக ஆக நீ ஆசைப்படுகிறாயோ அதுவாகவே நீ மாறு. அதுவே உனக்கான முதல் வெற்றி.

12. என்னை வீழ்த்தவே முடியாது என்பது நம்பிக்கை அல்ல, வீழ்ந்தாலும் எழுவேன் என்பதே நம்பிக்கை!

13. தவறி விழுந்த விதையே முளைக்கும் போது, தடுமாறி விழுந்த நம் வாழ்க்கை சிறக்காதா என்ன? நம்பிக்கையோடு எழு.

14. 'தளராத' இதயம் உள்ளவனுக்கு இவ்வுலகில் 'முடியாத' என்ற சொல் தெரியாது!

15. உலகில் நிகழும் ஒவ்வொரு மாற்றத்திற்குப் பின்பும், யாரோ ஒருவரின் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கும் - மார்டின் லூதர் கிங்.

16. விழுந்த அடிகளை, படிகளாக நினைத்துவிட்டால் எந்த உயரத்தையும் தொட்டு விடலாம்!

17. தன் திறமையின் மீது ஆழமான நம்பிக்கை கொண்ட ஒருவனின் பார்வை எதிரில் உள்ளவர்களுக்குத் திமிராகத் தோன்றுவதில் தவறில்லை.

18. செல்லும் பாதை சரியாக இருந்தால், எப்படிப்பட்ட பயணம் எனினும் வெற்றிதான்!

19. மலையில் தங்கும் மேகம், காலையில் கரைந்து போகும்! கடலாய் சூழ்ந்த சோகம், அதுவும் கடந்து போகும்!

20. கடினமாக உழைத்தும் சோர்வு தெரியவில்லையா? அதுதான் உனக்குப் பிடித்த வேலை!

21. உன் பலத்தை கண்டு பயந்தவன்! உன் பலவீனத்தை அறிய ஆவலாய் இருப்பான்.. "பலத்தை உறுதிப்படுத்து" பலவீனத்தை பலவீனமாக்கு'

22. சிந்தனைகளை சாதிக்கும் கருவியாக மாற்றத்தெரிந்தவனே வெற்றி பெறுகிறான்.

23. வெற்றியும் தோல்வியும் இரண்டு படிக்கட்டுகளே, ஒன்றில் உன்னை உணர்வாய் ; மற்றொன்றில் உன்னை திருத்திக்கொள்வாய்.

24. சாவு நெனச்சா வரும் ; சாதனை ஜெயிச்சா தான் வரும்.

25. வழிகள் இன்றி கூட வாழ்க்கை அமையலாம் ; ஆனால் வலிகள் இன்றி வாழ்க்கை அமையாது!

26. சுமைகளை கண்டு துவண்டு விடாதே! உலகை சுமக்கும் பூமிகூட உன் காலடியில் தான்!

27. எதிர்மறை எண்ணங்களை எதிரியாக்கிக்கொள்! எளிதில் வெற்றி பெறுவாய்!

28. கடந்து சென்றவை அனைத்தும் பாதைகள் அல்ல! நாம் கற்றுக்கொண்டவை மட்டுமே பாடங்கள்!

29. கடலில் கல் எறிவதால் கடலுக்கு வலிப்பது இல்லை, கல் தான் காணாமல் போகும்! அதே போல விமர்சனங்கள் கல்லாக இருக்கட்டும்,நாம் கடலாக இருப்போம்.

30. நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்- அப்துல் கலாம்

31. நம்பிக்கையோடு இருந்தால், நம் வாழ்க்கைக்கான ஆதாரமும் அங்கீகாரமும் தானாகவே கிடைக்கும்!

32. வானின்றி மழை இல்லை! நீரின்றி உலகில்லை! வலியின்றி வாழ்வும் இல்லை!

33. பாதைகள் மோசமாக இருப்பினும், பயணம் அட்டகாசமாய் அமையும், நம்பிக்கையோடு அடி எடுத்து வைத்தால்.

34. நம்பிக்கை என்னும் ரதத்தில் பயணிப்பவர்களுக்கு, வெற்றியின் இலக்கு எட்டும் தூரமே.

35. நம்பிக்கை என்பது சூரியனை போல; அதை நோக்கி நாம் செல்லச் செல்ல மனச்சுமை என்ற நிழல் நம் பின்னால் போய்விடும்!

36. அவமானத்தின் வலி, அழகிய வாழ்க்கைக்கான வழி!

37. உலகவரலாற்றைப் படிப்பதைவிட உலகில் வரலாறு படைப்பதே, இனிமை!

38. உன் மனதிலிருக்கும் அச்சம் தான், உன் முதல் எதிரி! நீ தயங்கி நிற்கும் நொடிகள் தான், உன் முதல் தோல்வி!

39. முடிவெடுப்பது பெரிய விஷயமல்ல! எடுத்த முடிவை முடிப்பதே விஷயம்!

40. சிந்தித்து செயல்படு! அதுவே, வெற்றியை சந்திக்கும் செயல்பாடு!

41. ஊதி விடப்பட்ட பலூன் உயரத்தில் தான் பறக்கும்! உதறித்தள்ளப்பட்ட நீயும் உயரத்தில் பற!

42. நம்பிக்கையுள்ள மனிதனுக்கு எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும். முட்கள் அல்ல!

43. வெற்றி வந்தால் பணிவு அவசியம்! தோல்வி வந்தால் பொறுமை அவசியம்! எதிர்ப்பு வந்தால் துணிவு அவசியம்! எது வரினும் நம்பிக்கை அவசியம்!

44. தீயதை விட்டு தூரத்தில் ஓடு! நல்லதை விடாமல் துரத்தி ஓடு!

45. தூக்கிபோட்டால் துவண்டு விடாதீர்கள்! ஒதுக்கி வைத்தால் ஒடுங்கி விடாதீர்கள். உங்களுக்கான நாள் ஒருநாள் வரும்.

46. யாரையும் தெருவில் கிடக்கும் காகிதமாக நினைத்துவிடாதே! நாளை அது பட்டமாகப் பறந்தால் நீயும் சற்று நிமிர்ந்து தான் பார்க்க வேண்டும்!

47. நம் பாதம் சிறியதுதான். ஆனால், நம் பயணத்தின் பாதை பெரிதாக இருக்கட்டும்

48. எதையுமே எதிர்பார்க்காது உழைக்கும் உழைப்பிற்கு தான், வெற்றி கிடைக்கும்!

49. பிடிக்க முடியாத நட்சத்திரமும் என் கைக்குள் வரும் என உறுதி கொள்! உச்சம் தொடும் நாள் வரும்.

50. ஒரு மில்லிமீட்டர் புன்னகை நினைக்கமுடியாத நம்பிக்கையைத் தரும்!

51. துன்பங்கள் ஆயிரம் இருக்கலாம்! அதை தூக்கி எறி. மலர்ந்த முகத்தை மட்டும் காட்டு. வெறுப்பவர் கூட ரசிப்பார்கள்.

52. எவ்வளவு வேகமாக செல்கிறோம் என்பதைவிட, எவ்வளவு தூரம் நிற்காமல் செல்கிறோம் என்பதே முக்கியம்!

53. இழந்த அனைத்தையும் மீட்டு விடலாம், தன்னம்பிக்கை என்ற ஒன்று இருந்தால்!

54. எதையும் தாங்கும் மன வலிமை ஒன்று உனக்குள் இருந்தால் தோல்விகளை துவைத்து காயப்போட்டு விடலாம்.

55. காலத்தின் கடும் வெள்ளத்தில் கரை தேடி அலையும் போது, நடுவில் ஆயிரம் தடை வந்தாலும், நீச்சல் கரை சேர்ப்பதே தன்னம்பிக்கை!

56. கடினமான நாட்கள் தான், உங்களை பலப்படுத்துகின்றன!

57. குறைகளை காரணம் காட்டி ஒதுக்கிய உலகம், உன் வெற்றியை கூடி கொண்டாடும் நாள் வரும் வரை காத்திரு. அதுவரை கவலை மறந்திரு!

58. உன்னை கூண்டில் வைத்து அடைக்கலாம்! சிந்தனைகளை, யாராலும் கூண்டில் அடைத்து வைக்க முடியாது! திறமை ஒருநாள் பீறிட்டு எழும்.

59. வாழ்க்கைல எவ்வளவு பிரச்சினை வந்தாலும் சரி பாத்துக்கலாம்னு நினைச்சு அடுத்ததை பாருங்க நண்பா. உங்களை யாராலும் தடுக்க முடியாது.

60. வாழ்க்கை, துணியாதவர்களுக்கு பயங்காட்டும்! துணிந்து பார், வழிகாட்டும்!

61. கடந்த காலத்தை நினைக்காதே! கண்ணீர் தான் வரும். எதிர் காலத்தை எதிர் பார்க்காதே! இந்த நிமிடம் , இந்த நொடி தான் உண்மை. அதை அனுபவி. நல்லதையே நினை. நல்லதே நடக்கும்.

62. தன் புகழ் பாடாதே! நிறைகுடம் ஒருபோதும் தழும்பி தன் நிறைவை சொல்வதில்லை! சிங்கம் ஒருபோதும் கர்ஜித்து ராஜாவென்று சொல்வதில்லை! மகான் ஒருபோதும் கூவி தான் மகானென்று சொல்வதில்லை! முதலில் உன்னை உணர்.

63. நீங்கள் உயரப் பறக்க ஆசை கொண்டால், உங்கள் மனதின் சுமைகளைக் குறைக்க வேண்டும்!

64. உன் வாழ்வில் நீ எதிர்கொள்ளும் துன்பங்கள், தோல்விகள் கண்டு துவண்டு விடாதே! உனக்கான ஒரு நாள் வரும் வரை ஓடிக் கொண்டே இரு! உன்னால் முடியாது என பலர் கூறிய வார்த்தைகளே என்னை வெற்றியின் பக்கம் தள்ளியது - ஜாக்கி சான்

65. ஒரு கதவு மூடப்பட்டால், அதைவிட சிறந்த வழி ஏதோ ஒன்று இருக்கிறது என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்!

66. உங்களின் இன்றைய செயல் தான் உங்களுக்குரிய நாளைய பொழுது எது என்பதை தீர்மானிக்கும்.

67. கனவை கண்டதோடு மட்டும் நிறுத்தாமல், கனவு நனவாகும் வரை துரத்திச் செல்!

68. வெற்றிகள் கூட கற்றுத் தராத மனவுறுதியை அடைய, வாழ்வில் வீழ்ந்தே எழ வேண்டும்!

69. எண்ணங்கள் நன்றாக இருந்தால் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நன்றாக அமையும்

70. வாழ்க்கையில் சாதனை படைக்க ஆசைப்பட்டால், பல துன்பங்களையும், அவமானங்களையும் சந்தித்தே ஆக வேண்டும்!

71. வீழ்வது முடிவல்ல, மண்ணில் வீழ்ந்த பின்னே தொடங்குகிறது மழைத்துளியின் மதிப்பும் வாழ்வும்!

72.உங்களை உங்களுக்கே பிடிக்கும் வகையில் உங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ளுங்கள்.வெற்றிகள் உங்கள் முகவரி தேடி வரும்.

73. பெரிதாக யோசி! சிறிதாக தொடங்கு! ஒரே நாளில் உயர்ந்துவிட முடியாது!

74. ஒரு மனிதன் தன் பிள்ளைகளுக்குச் செல்வத்தைச் சேர்த்து வைப்பதைவிட, உழைக்கும் பழக்கத்தைக் கற்றுக் கொடுப்பது ஆயிரம் நூல்களை வாங்கிக்கொடுத்ததற்கு ஒப்பாகும்.

75. அனுபவம் என்பது ஒரு புது ஆசிரியர்.அவர் கற்றுத் தந்த பாடங்களுக்கு பரீட்சை வைப்பதில்லை. பரீட்சைகளின் மூலமேதான் பாடங்களை கற்றுத் தருகிறார்.

76. உன்னை நிராகரித்தவர்களை உன்னுடன் பேசக் காத்திருக்கும் நிலையை உருவாக்கு. அதுவும் ஒரு வகை வெற்றி தான்!

77. எதிர்காலத்தை கணிக்க மிகச் சிறந்த வழி, அதை உருவாக்குவதே ஆகும்! - ஆபிரகாம் லிங்கன்

78. உலகமே உன்னை எதிர்த்தாலும், துணிந்து நில்! இறுதிவரை கர்வத்தோடு இவ்வுலகை ஆளலாம்!

79. கடுமையான பாதை என்று எதுவுமில்லை! பாதையை மாற்றாதே, பாதை குறித்த உன் பார்வையை மாற்று!

80. இனியும் என் வாழ்வில் யாரையும் நம்பி இழப்பதற்கு ஏதுமில்லை! தன்னம்பிக்கை ஒன்றைத்தவிர!

81. தூக்கி எறியப்படும் தருணங்களில் தான் சிறகை விரிக்க வாய்ப்பு கிடைக்கிறது.

82. ஆமையை ரோட்டில் விட்டு, அதன் வேகத்தை குறை கூறுவது பழக்கம்! அதை நீரில் விட்டால், நம்மால் தான் பிடிக்க முடியுமா? இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் எவனும் வல்லவனே!

83. எதை, எதையோ அடையத் துடிக்கும் இதயத்தைக் கொஞ்சம் திசை மாற்றி இலட்சியத்தை அடைய வழிகாட்டுங்கள்!

84. எந்த சூழ்நிலையில் நீ வீழ்ந்தாலும், பிறர் உன்னை வீழ்த்தினாலும், எழுந்து நிற்கக் கற்றுக் கொள்! வீழ்வதும் எழுவதும் குழந்தை பருவத்தில் கற்றதுதானே!

85. நேற்றைய பொழுது நிஜமில்லை! நாளைய பொழுது நிச்சயமில்லை! இன்று மட்டும் நம் கையில்!

86. இருட்டில் இருப்பதாக கவலை கொள்ளவேண்டாம். காத்திருந்தாள் இருளும் பழகிப்போகும். இருளுக்குப் பின்னே விடியல்.

87. தாண்டும் தூரத்தை விட, தடுக்கும் துரோகிகளே அதிகம்!

88. சில கனவுகள், விழிக்க விடுவதில்லை! சில கனவுகள் உறங்க விடுவதில்லை!

89. போராடாமல் கிடைத்த வெற்றியை என்றும் கொண்டாட நினைக்காதே.

90. நீ சூரியனைப் போலப் பிரகாசிக்க வேண்டுமானால், முதலில் சூரியனைப் போல எரிய வேண்டும்!

91. உன் தோல்வியைக் கண்டு சிரிப்பவர்களைப் பார்த்து நீ சோர்ந்துவிடாதே! ஏளனம் செய்தவர்களுக்குத் தெரியாது நாளை நீ என்னவாக இருக்கப் போகிறாய் என்று!

92. ஜெயிக்கும் வரையில் தன்னம்பிக்கை அவசியம்! ஜெயித்த பிறகு தன்னடக்கம் அவசியம்!

93. வாழ்க்கை மனிதனுக்கு தொடர்ந்து வழங்கிக்கொண்டிருக்கும் இரண்டாவது வாய்ப்பு, நாளை!

94. வலிகள் ஆயிரம் இருக்கிறது; இருக்கட்டுமே, அதற்கெல்லாம்வழி இருக்கிறது!

95. ஒடும்போது விழுந்து விடுவோம் என்று நினைக்காதே, விழுந்தாலும் எழுந்துவிடுவோம் என்று ஓடு!

96. பிறரால் நமக்குக் கொடுக்கப்படும் சவால்களே சாதித்துக் காட்டும் வரை உறங்கவிடாது, நம்மை துரத்தும் ஆயுதம்.

97. இதுவரை வாழ்ந்த வாழ்வை அழிக்கவும் முடியாது! இனி வாழப் போகும் வாழ்வை அறியவும் முடியாது! கற்றுக்கொண்ட பாடங்கள் தான் கடக்க உதவுகிறது.

98. உன் மனதுக்குள் இருக்கும் அச்சம் தான் உன் முதல் எதிரி! நீ தயங்கி நிற்கும் நொடிகள் தான் உன் முதல் தோல்வி!

99. வெற்றிகளை அடுக்கும் அலமாரியில் முதல் வரிசையை அழகாக்க காரணமானவன், தோல்வி!

100. உன் கனவுகளுக்கு உயிர் கொடு. என்றோ ஒரு நாள் அல்ல. ஒவ்வொரு நாளும்.

101. என்னால் முடியும் என்ற நம்பிக்கை கொண்ட மனிதன் யாரும், அடுத்தவர்களின் உதவியை நாடுவதில்லை

102. எதிரி எவ்வளவு பெரியவன் என்பது முக்கியமல்ல, எதிர்த்து நிற்கும் திறன் எவ்வளவு பெரிது என்பதே முக்கியம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 7 March 2024 6:57 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  2. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  3. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  4. வணிகம்
    கடனில் மூழ்கி வாழ்க்கை போச்சா? மீள ஒரு வழி இருக்கு!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. வணிகம்
    சில ஆயிரங்கள பல லட்சம் கோடிகளா மாத்தணுமா? கூட்டு வட்டி பத்தி...
  7. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  8. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...
  9. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!