/* */

இளைஞர்களின் குரல் திட்டம்: பிரதமர் நாளை தொடங்கி வைப்பு

'வளர்ச்சி அடைந்த இந்தியா @ 2047: இளைஞர்களின் குரல்' திட்டத்தை நாளை (டிசம்பர் 11-ஆம் தேதி ) பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

HIGHLIGHTS

இளைஞர்களின் குரல் திட்டம்: பிரதமர் நாளை தொடங்கி வைப்பு
X

பிரதமர் நரேந்திர மோடி.

'வளர்ச்சி அடைந்த இந்தியா @ 2047: இளைஞர்களின் குரல்' திட்டத்தை நாளை (டிசம்பர் 11-ஆம் தேதி ) பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி, நாளை காலை 10:30 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் 'வளர்ச்சி அடைந்த இந்தியா @2047 : இளைஞர்களின் குரல்' என்ற திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். நாடு முழுவதும் உள்ள ஆளுநர் மாளிகைகளில் நடைபெறும் பயிலரங்குகளில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், நிறுவனத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மத்தியில் பிரதமர் உரையாற்றுவார்.

நாட்டின் தேசிய திட்டங்கள், முன்னுரிமைகள் மற்றும் இலக்குகளை உருவாக்குவதில் நாட்டின் இளைஞர்களைத் தீவிரமாக ஈடுபடுத்துவதே பிரதமரின் நோக்கமாகும். இந்த தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, 'வளர்ச்சி அடைந்த இந்தியா @ 2047 : இளைஞர்களின் குரல்' முன்முயற்சி நாட்டின் இளைஞர்களுக்கு வளர்ச்சி அடைந்த இந்தியா @ 2047 தொலைநோக்குப் பார்வைக்கு யோசனைகளை வழங்குவதற்கான ஒரு தளத்தை அளிக்கும். வளர்ச்சி அடைந்த இந்தியா @ 2047 க்கான தங்கள் யோசனைகள் மற்றும் ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்ள இளைஞர்களை ஈடுபடுத்தும் செயல்முறையைத் தொடங்குவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக இந்த பயிலரங்குகள் இருக்கும்.

வளர்ச்சி அடைந்த இந்தியா @ 2047 என்பது, சுதந்திரத்தின் நூற்றாண்டான 2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையாகும். பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் நல்லாட்சி உள்ளிட்ட வளர்ச்சியின் பல்வேறு அம்சங்களை இது உள்ளடக்கியுள்ளது.

Updated On: 10 Dec 2023 12:23 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!