/* */

ஏப்ரல் 1 முதல் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கம் - மத்திய அரசு

வரும் மார்ச் 31ம் தேதியுடன் அனைத்துவிதமான கொரோனா கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

HIGHLIGHTS

ஏப்ரல் 1 முதல் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கம் - மத்திய அரசு
X

இந்தியாவில் கொரோனா பரவலை தொடர்ந்து, அதை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. தொற்றுப் பரவல் குறையத் தொடங்கியதும், அவை படிப்படையாக விலகிக் கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது, கொரோனா தொற்று பெருமளவு குறைந்துள்ளது. எனவே, பெருந்தொற்று தொடர்பான கட்டுப்பாடுகளை முற்றிலுமாக நீக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து, மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, மாநில அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மாநில அரசுகள் விதித்துள்ள கொரோனா கட்டுபாட்டு விதிகளை நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை.

வரும் 31ம் தேதியுடன், கட்டுப்பாடுகளை முற்றிலும் நீக்கிவிடலாம். எனினும், சுகாதாரத்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும்.

மேலும், கொரோனா பரவல் இன்னமும் இருக்கும் பகுதிகலில், கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 24 March 2022 1:25 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!