சூப்பர் சிங்கர் சீசன் 9 வின்னர் யாரு? முதல்முறையா ஒரு பொண்ணு!
Super Singer 9 Winner-இந்த சுற்றில் மோதும் இந்த 5 பேரில் ஒருவருக்கு சூப்பர் சிங்கர் டைட்டில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு போட்டி தொடர்ந்தது.
HIGHLIGHTS
Super Singer 9 Winner-சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த சில மாதங்களாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதன் இறுதிச் சுற்று இன்று நடைபெற்றது. நிகழ்ச்சி முழுவதும் நேரலையில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் மூன்றாவது இடம், ரன்னர் அப், வின்னர் ஆகிய பரிசுகள் அறிவிக்கப்பட்டன.
தொடங்குகிறது சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 9 - அட்டகாசமான போட்டியாளர்களுடன்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பாப்புலரான நிகழ்ச்சி இந்த சூப்பர் சிங்கர். உலகம் முழுக்க இருந்து இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் இருக்காங்க. சீசன் 9 கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கி, இப்போது இறுதிச் சுற்றை நெருங்கியிருக்கிறது. இன்று மாலை நடைபெறும் இறுதிப் போட்டியில் யார் வெற்றி பெறப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு சூப்பர் சிங்கர் ரசிகர்களிடையே நிலவுகிறது.
25 ஜூன் 2023 இன்றைய தினம் நேரு ஸ்டேடியத்தில் நேரலையாக நடைபெற இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது.
இறுதிச்சுற்று போட்டியாளர்கள்
அபிஜித்
அருணா
பூஜா
பிரியா
பிரசன்னா
ஆகிய 5 பேரும் சீனியர் சூப்பர் சிங்கர் 9 நிகழ்ச்சியின் இறுதிச் சுற்று போட்டியாளர்களாக தேர்வாகியிருந்தனர். இந்த சுற்றில் மோதும் இந்த 5 பேரில் ஒருவருக்கு சூப்பர் சிங்கர் டைட்டில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு போட்டி தொடர்ந்தது.
இரண்டு சுற்றுகள் இந்த இறுதிப் போட்டியில் இருந்தன. முதல் சுற்றில் 5 பேரும் பாடல்கள் பாடிய பிறகு சிறிது இடைவேளைக்கு பிறகு, இரண்டாவது சுற்று நடைபெற்றது. இப்படி இரண்டு சுற்றுகளிலும் பாடிய போட்டியாளர்கள் இறுதி அறிவிப்புக்கு காத்திருந்தனர். வேற லெவல் போட்டி போட்டாங்க 5 பேரும். ஒவ்வொருத்தருக்கும் தனித்துவமான குரல்கள், சிறப்பான திறன்கள் என அனைவரும் இறுதிப் போட்டியில் வெல்ல தகுதியானவர்களாக இருக்கிறார்கள்.
வெற்றியாளர்களுக்கான அறிவிப்பை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வெளியிட்டார். மூன்றாவது இடத்தை பிரசன்னா பிடித்ததாக அறிவித்தார் ஹாரிஸ், அவருக்கு 5 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டது.
பல ஆன்மீகப் பாடல்களைப் பாடி அசத்தியிருந்த அருணா முதலிடத்தைப் பிடித்தார். அவருக்கு 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு பரிசாக கிடைத்தது. இரண்டாவது இடத்தைப் பிடித்த பிரியா ஜெர்சனுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2