/* */

நடிகர் சிலம்பரசனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நடிகர் சிலம்பரசன் ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை செலுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

HIGHLIGHTS

நடிகர் சிலம்பரசனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
X

நடிகர் சிலம்பரசன் (கோப்பு படம்).

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக இருந்தது முதல் தற்போது கதாநாயகன் வரை நடித்து வருபவர் சிம்பு என்கிற சிலம்பரசன். நடிகரும், இயக்குநருமான ராஜேந்தரின் மகனான சிலம்பரசன் நடித்து வெளிவந்த மாநாடு, வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

இந்த நிலையில், நடிகர் சிலம்பரசன் மீது வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்துள்ளது. அந்த வழக்கு தொடர்பான மனுவில், தங்களது நிறுவனத்தின் தயாரிப்பிற்காக திட்டமிட்டபட்டிருந்தப் கொரோனா குமார் என்ற படத்தில் நடிப்பதாக நடிகர் சிலம்பரசனை ஒப்பந்தம் செய்ததாக கூறப்பட்டுள்ளது.

அந்த படத்தில் நடிப்பதற்காக சிலம்பரசனுக்கு மொத்தம் ஒன்பதரை கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்ட நிலையில், முன்பணமாக நான்கரை கோடி ரூபாயை கடந்த 2021 ஆம் ஆண்டு அளித்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பணத்தை பெற்றுக்கொண்டு நடிகர் சிலம்பரசன் படப்பிடிக்கு வரவில்லை எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

எனவே, கொரோனா குமார் படத்தை முடித்து கொடுக்காமல் மற்ற படங்களில் நடிக்க தடை விதிக்க வேண்டும் என வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சிலம்பரசன் மற்றும் வேல்ஸ் நிறுவனம் இடையே போடப்பட்ட ஒப்பந்தம் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் ஒரு கோடி ரூபாய் மட்டுமே சிலம்பரசனுக்கு வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. வேல்ஸ் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சிலம்பரசனுக்கு நான்கரை கோடி ரூபாய் கொடுத்ததாகவும் அதற்கான வரவு செலவு விவரங்களையும் தாக்கல் செய்ததோடு, குறிப்பிட்ட தொகை ரொக்கமாக அளிக்கப்பட்டதாகவும் கூறினார்.

அதனை ஏற்க மறுத்த நீதிபதி ஒப்பந்தத்தில் உள்ள படி, ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை செலுத்த நடிகர் சிலம்பரசனுக்கு உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினத்துக்குள் ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை செலுத்தவில்லை என்றால் மேல் உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

Updated On: 30 Aug 2023 8:36 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?