/* */

வாழைப்பழம் கேட்டு டீ ஸ்டாலை கவிழ்த்துவிடும் - நடிகர் பவுன்ராஜ் மரணம்.

அடுத்தடுத்த மரணங்கள் சக கலைஞர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன

HIGHLIGHTS

வாழைப்பழம் கேட்டு டீ ஸ்டாலை கவிழ்த்துவிடும் - நடிகர் பவுன்ராஜ் மரணம்.
X

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்'.. 'ரஜினி முருகன்' படத்தின் நடிகர் பவுன்ராஜ் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' அந்த ஆண்டின் வசூல் சாதனை படங்களில் ஒன்று. அப்படத்திலும், அதேபோல, 2015 ஆம் ஆண்டு வெளியான 'ரஜினி முருகன்' படத்திலும் நகைச்சுவையோடு நடித்து கவனம் ஈர்த்தார் பவுன்ராஜ்.

குறிப்பாக, ரஜினி முருகன் படத்தில் வாழைப்பழம் கேட்டு டீ ஸ்டாலையே கவிழ்த்துவிடும் அவரது காட்சி ரசிக்க வைத்தது.


இந்நிலையில், பவுன்ராஜ் இன்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவரது மரணத்திற்கு இயக்குநர் பொன்ராம் தனது ட்விட்டர் பக்கத்தில், "வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினி முருகன், போன்ற படங்களில் நடித்தவரும் எனது கோ டைரக்டருமான பவுன்ராஜ் ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட்டார். அவருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்" என்று வருத்தமுடன் தெரிவித்துள்ளார். சீமராஜா படத்திலும் இவர் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனநாதன், விவேக், தாமிரா, கே.வி.ஆனந்த், பாண்டு, நெல்லை சிவா, தற்போது பவுன்ராஜ் எனக் கடந்த சில மாதங்களில் திரைத்துறையைச் சேர்ந்தவர்களின் அடுத்தடுத்த மரணங்கள் சக கலைஞர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.

Updated On: 15 May 2021 11:46 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!