Begin typing your search above and press return to search.
திருப்பூரில் இன்று 897 பேருக்கு கொரோனா பாதிப்பு
திருப்பூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 897 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது; 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
HIGHLIGHTS
கொரோனா பாதிப்பில் முன்னணியில் இருந்த திருப்பூர் மாவட்டத்தில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்த நிலையில், சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 897, ஆக உள்ளது.
மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் பலியானவர்களின் எண்ணிக்கை–12, ஆகும். திருப்பூர் மாவட்டம் முழுவதும் 72, ஆயிரத்து 37, பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 53, ஆயிரத்து 940, பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டம் முழுவதும் மொத்தம், 612, பேர் இறந்து உள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் தற்போது, 17, ஆயிரத்து 485,பேர் சிகிச்சையில் உள்ளனர்.