/* */

புத்தாண்டு நள்ளிரவு திருப்பலி

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தேவாலயங்களில் நள்ளிரவு திருப்பலி நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

புத்தாண்டு நள்ளிரவு திருப்பலி
X

பைல் படம்.

கிறிஸ்தவ தேவாலயங்களில் புத்தாண்டை முன்னிட்டு, நள்ளிரவு, 11:00 மணிக்கு நற்கருணை ஆராதனையும், தொடர்ந்து, கூட்டுப்பாடல் திருப்பலியும் நடந்தது. அவினாசி புனித தோமையார் தேவாலயத்தில் பங்கு குரு கென்னடி, அருட்திரு. ஜெயராஜ் ஆகியோர் திருப்பலி நிறைவேற்றினர். திருப்பலி முடிவில், தேவாலய பணியாளர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதே போன்று, மற்ற தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது. கெரோனா, ஒமைக்ரான் தொற்று ஒழிய வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்து பிரார்த்தனை ஏறெடுக்கப்பட்டது.

Updated On: 1 Jan 2022 11:30 AM GMT

Related News