/* */

கலப்பட கிராம்பு : கண்டுபிடிப்பது எப்படி? உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் விளக்கம்

கலப்படம் செய்யப்பட்ட கிராம்பு மற்றும் அவற்றை கண்டுபிடிப்பது குறித்து உணவு பாதுகாப்பு துறை அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.

HIGHLIGHTS

கலப்பட கிராம்பு : கண்டுபிடிப்பது எப்படி? உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் விளக்கம்
X

கிராம்பு. (மாதிரி படம்).

கிராம்பு என்பது, Eugenia Caryophyllus (C.Sprengel) Bullock and Harrision என்ற தாவரத்தின் பூக்காத பூ மொட்டுக்களாகும். நூறு கிராம் கிராம்புவில் 323 Kcal எரிசக்தியும், மொத்த கொழுப்பு 20.1 கி, இதில் சேச்சுரேடட் ஃபேட்டி ஆசிட் 5.4 கி, மோனோ-அன்சேச்சுரேடட் ஃபேட்டி ஆசிட் 1.5 கி மற்றும் பாலி-அன்சேச்சுரேடட் ஃபேட்டி ஆசிட் 7.1 கி, மொத்த கார்போஹைட்ரேட் 61.2 கி, அதில், நார்ச்சத்து 34.2 கி, புரதம் 6 கிராம் என்ற அளவிலும் உள்ளது.

நூறு கிராம் கிராம்புவில் கால்சியம் 646 மிகி (தினசரி தேவையில் 65%), இரும்புச்சத்து 8.7 மிகி (தினசரி தேவையில் 48%), மெக்னீசியம் 264 மிகி (தினசரி தேவையில் 66%), மாங்கனீஸ் 30 மிகி (தினசரி தேவையில் 1502%), பாஸ்பரஸ் 105 மிகி (தினசரி தேவையில் 11%), பொட்டாசியம் 1102 மிகி (தினசரி தேவையில் 31%), ஸிங்க் 1.1 மிகி (தினசரி தேவையில் 7%) என்ற அளவில் உள்ளது.

மேலும் வைட்டமின் - ஏ 530 ஐயு (தினசரி தேவையில் 11%), வைட்டமின் - சி 80.8 மிகி (தினசரி தேவையில் 135%), வைட்டமின் - கே 142 மைகி (தினசரி தேவையில் 177%), வைட்டமின்-இ 8.5 மிகி (தினசரி தேவையில் 43%) மற்றும் வைட்டமின்-பி9 (ஃபோலேட்) 93 மைகி (தினசரி தேவையில் 23%) என்றளவில் உள்ளது.

கிராம்புவினை உணவு தர பிளாஸ்டிக் கொள்கலன் அல்லது கண்ணாடி கொள்கலனில் காற்றுப் போகாமல் இருக்க மூடி, ஈரப்பதமற்ற, உலர்ந்த மற்றும் வெளிச்சம் குறைவான இடத்தில் வைத்து பாதுகாத்து வந்தால், தாராளமாக 3 ஆண்டுகள் வரை அதைப் பயன்படுத்தலாம்.

பாதுகாப்பற்ற முறையில் இருப்பு வைத்தால், கிராம்பு மூன்று மாதங்களிலேயே நிறம் குறைய ஆரம்பிக்கும். ஒருவேளை, உரிய சூழ்நிலையில் இருப்பு வைத்தும், கிராம்புவின் வாசனை குறைந்து போய்விட்டால், இளஞ்சூட்டில் இரண்டு நிமிடங்கள் வறுத்தால், அதன் வாசனை மீண்டுவிடும்.

சுத்தமான கிராம்புவில் பயன்படுத்திய கிராம்பு, தாய் கிராம்பு, கிராம்புத் தண்டு, மரத்துண்டு, கல் ஆகியவை கலப்படம் செய்யப்படுகின்றன. பயன்படுத்திய கிராம்பு என்பது, கிராம்புவில் இருந்து அதன் இயற்கையான எண்ணெயை, ‘வடித்தல்’ முறையில் அகற்றிவிட்டு, செயற்கை நறுமணம் தெளித்து, புதிய கிராம்புகளுடன் கலந்து விடுவார்கள்.

ஒரு கண்ணாடி டம்ளரில் முக்கால் பாகம் தண்ணீர் எடுத்துக் கொண்டு, சிறிதளவு கிராம்புகளை அதில் போட வேண்டும். புதிய மற்றும் உண்மையான கிராம்பு தண்ணீரில் மூழ்கி, டம்பளரின் அடியில் தேங்கும். ஆனால், பயன்படுத்திய அதாவது, எண்ணெய் எடுக்கப்பட்ட கிராம்புகள் தண்ணீரில் மிதக்கும்.

Updated On: 10 April 2023 2:50 AM GMT

Related News