/* */

மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில் திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில் திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில் திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு
X

மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில்  திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.

மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில் திமுக இளைஞர் அணி சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.

மதுரை திருப்பரங்குன்றம் 16 கால் பண்டபத்தில், கோடை வெயிலில் அவதிக்கு உள்ளாகும் பொது மக்களுக்கு நீர், மோர், தண்ணீர் பழம், பழரசம் ஜூஸ், சர்பத் இளநீர், கொடுத்தனர் திமுக இளைஞரணியினர்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், கோடை வெயில் 104 டிகிரி வரை உச்சத்தை எட்டி உள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மழை இல்லாமல் வெயில் வெளுத்து வாங்கி வருகின்றது. இதனால், மக்கள் வெயிலின் தாக்கத்தால் வாடி வதங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் மக்களை கோடை வெயிலில் இருந்து பாதுகாக்கவும், பொதுமக்கள் கோடை வெயில் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள திமுக இளைஞரணி சார்பாக நீர் மோர், தண்ணீர் பழம், வெள்ளரிப்பிஞ்சு போன்றவைகளை பொது மக்களுக்கு கொடுத்தனர்.

விழாவிற்கு மதுரை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி செயலாளர் விமல் தலைமை தாங்கினார். மதுரை மாநகராட்சி மண்டலம் 5 தலைவர் சுவிதா விமல், பகுதி செயலாளர் கிருஷ்ண பாண்டி, ஆறுமுகம், டிப்போ ரவி கவுன்சிலர் சக்தி ரமேஷ், ரவிசந்திரன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

16 கால் மண்டபத்தில் பொதுமக்களுக்கு நீர் மோர், தண்ணீர் பழம், பழரச சூஸ், சர்பத், ரோஸ் மில்க் போன்றவைகளை பொது மக்களுக்கு வழங்கினர்.

பொதுமக்கள் நீர்மோர் தண்ணீர் பழம் சர்பத் பழரசம் ஆகியவற்றை விரும்பி ஆவலுடன் வாங்கி சாப்பிட்டு கோடை வெயிலின் தாக்கத்தை தீர்த்துக் கொண்டனர்.

Updated On: 1 May 2024 9:42 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!