/* */

மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்டம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் சார்பில் தண்ணீர் பந்தல்கள் திறக்கப்படுகிறது

HIGHLIGHTS

மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
X

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக ஜே பேரவை சார்பில் காஞ்சிபுரம் காந்தி சாலையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சியினை மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் காஞ்சிபுரம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ராஜசேகர் , மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், மாவட்ட ஜே பேரவை செயலாளர் கே.யு.எஸ். சோமசுந்தரம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் திறந்து வைத்த போது

காஞ்சிபுரம் மாவட்ட ஜெ. பேரவை சார்பில் காந்தி சாலையில் பொதுமக்கள் நலன் கருதி தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு பழங்கள், பழரசங்கள் வழங்கப்பட்டது.

தமிழக முழுதும் கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை காத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இந்நிலையில் அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு மோர், இளநீர் உட்பட பல வகை குளிர்ச்சியான பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.


அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் கடந்த 10 தினங்களாக பல்வேறு அமைப்புகளின் சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது.


அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் கே.யு.எஸ் சோமசுந்தரம் ஏற்பாட்டின் பேரில், காஞ்சிபுரம் காந்தி சாலை பகுதியில் அதிகம் பொதுமக்கள் நடமாடும் இருக்கும் நிலையில் அவர்களுக்கு கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் கூழ், மோர், பழரசம் மற்றும் கீரைக்காய், வெள்ளரி, தர்பூசணி உள்ளிட்ட பழ வகைகளும், சிறுவர்களுக்கு ஐஸ்கிரீம் உள்ளிட்டவைகளை மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், கழக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன், நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ராஜசேகர், மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், உள்ளிட்டோர் வழங்கினர்.

தண்ணீர் பந்தலில் வழங்கப்படும் பொருட்களை பெற வழக்கம்போல் பொதுமக்கள் முட்டி மோதி சூறையாடியும், குளிர்பானங்களை பெற்றும் சென்றனர்.

Updated On: 8 May 2024 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு