/* */

அருணாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு: மழையால் அடித்து செல்லப்பட்ட சாலைகள்

அருணாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு மற்றும் மழையால் சாலைகள் அடித்து செல்லப்பட்டு விட்டன.

HIGHLIGHTS

அருணாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு: மழையால் அடித்து செல்லப்பட்ட சாலைகள்
X

அருணாசல பிரதேசத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் நடந்து வரும்  மீட்பு பணி.

அருணாச்சலப் பிரதேசத்தில் கனமழை காரணமாக கடும் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. நிலச்சரிவு காரணமாக அருணாச்சலப் பிரதேச - சீன எல்லையில் போடப்பட்ட சாலைகள் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன

அருணாச்சலப் பிரதேசத்தில் சீனா எல்லையை ஒட்டிய பகுதியான திபாங் பள்ளத்தாக்கில் பெய்து வந்த கனமழை காரணமாக கடும் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. நிலச்சரிவு காரணமாக ஹுன்லி மற்றும் அனினி நகரங்களுக்கு இடையேயான தேசிய நெடுஞ்சாலை 33 அடித்து செல்லப்பட்டிருக்கிறது. மீட்பு பணிகளில் தீவிரமாக வருகின்றன. நிலச்சரிவு குறித்து அதிகாரிகள் கூறுகையில், கடந்த சில நாட்களாக பெய்த கனமழைதான் இந்த நிலச்சரிவுக்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அருணாச்சலப் பிரதேசத்தின் முதல்வர் பெமா காண்டு கூறுகையில், "ஹுன்லிக்கும் அனினிக்கும் இடையே உள்ள நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள பெரும் சேதத்தால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சாலை திபாங் பள்ளத்தாக்கை நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் என்பதால், விரைவில் சாலையை பராமரிக்க அறிவுறுத்தியுள்ளேன்" என்று கூறியுள்ளார்.

அருணாசல பிரதேசம் சீன எல்லையில் உள்ள ஒரு முழுமையான இந்திய மாநிலம் ஆகும். ஆனால் அருணாசல பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது. தனது நாட்டின் வரைபடத்தில் கூட அந்த பகுதிகளை சேர்த்து அவற்றிற்கு தனியாக பெயரும் சூட்டி உள்ளது. ஆனால் அந்த பகுதிகள் இன்று வரை இந்தியாவின் கட்டுப்பாட்டில் தான் இருப்பதாக இந்திய அரசு தரப்பில் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் தற்போது அருணாசல பிரதேசத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 25 April 2024 12:12 PM GMT

Related News

Latest News

  1. மதுரை மாநகர்
    மதுரை மாட்டுத்தாவணி காய் கனி வியாபாரிகள் பொதுக் குழுக் கூட்டம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்!
  3. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே பூட்டிக் கிடந்த மரக் கடையில் தீ விபத்து
  4. சோழவந்தான்
    வாடிப்பட்டி அருகே வைகாசி விசாக திருவிழா..!
  5. லைஃப்ஸ்டைல்
    மணவறையில் தொடங்குவது அல்ல; மன அறையில் தொடங்குவதே காதல்
  6. தொழில்நுட்பம்
    AI-ன் வளர்ச்சி தேடுபொறிகளை காணாமல் ஆக்குமா..? பிச்சை என்ன சொல்கிறார்?
  7. லைஃப்ஸ்டைல்
    வாரிக்கொடுக்கும் வாட்ஸ்ஆப் மொழிகள்..! தேடி படீங்க..!
  8. வீடியோ
    😎SalmanKhan-உடன் இணையும் AR Murugadoss !சம்பவம் Loading🔥!#salmankhan...
  9. லைஃப்ஸ்டைல்
    சீற்றத்தை அடக்கி ஆளும் சீறாப்புதல்வன், 'மௌனம்'..!
  10. கும்மிடிப்பூண்டி
    தலைமை ஆசிரியர் பணி நிறைவு பாராட்டு விழா!