/* */

சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்

சித்திரை மாத கிருத்திகையையொட்டி, பால்குட ஊா்வலம் நடைபெற்றது.

HIGHLIGHTS

சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
X

பால்குட ஊர்வலம்

வந்தவாசியை அடுத்த காரம் கிராமத்தில் 108 பால்குட ஊா்வலம் நடைபெற்றது.

இங்குள்ள வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீசிவசுப்பிரமணியா் கோயிலில் சித்திரை மாத கிருத்திகையையொட்டி, பால்குட ஊா்வலம் நடைபெற்றது.

பெண்கள் பால் குடங்களுடன் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக சென்றனா்.

கோயிலை சென்றடைந்ததும் சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

அக்னி வசந்த விழா

வந்தவாசியை அடுத்த இரும்பேடு கிராமத்தில் ஸ்ரீதிரெளபதி அம்மன் கோயில் அக்னி வசந்த விழாவையொட்டி, அா்ஜுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்தக் கோயிலில் அக்னி வசந்த விழா கடந்த ஏப்.24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சொற்பொழிவாளா் அன்மருதை சி.பிள்ளையாரின் மகாபாரத சொற்பொழிவும், நெடும்பிறை ஸ்ரீபொன்னியம்மன் நாடக மன்றத்தினரின் மகாபாரத நாடகமும் நடைபெற்றது.

விழாவின் ஒரு பகுதியாக புதன்கிழமை அா்ஜுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி, கோயில் அருகில் தபசு மரம் நடப்பட்டது.

இதில் அா்ஜுனன் வேடமணிந்த நாடக நடிகா் சிவனை வேண்டி தவம் புரிவதற்காக தபசு மரத்தில் ஏறி தீபாராதனை காண்பித்தாா். பின்னா், பொதுமக்களுக்கு அவா் பிரசாதம் வழங்கினாா்.

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் அக்னி சட்டி ஏந்தி நோ்த்திக் கடன்

வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணா நகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை மாத கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி காலை மூலவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தொடா்ந்து கோயில் வளாகத்தில் ஸ்ரீசா்வ மங்கள மகா வேள்வி பூஜை நடைபெற்றது. பல்வேறு மூலிகைகள், புஷ்பங்கள், பழங்கள் கொண்டு இந்த வேள்வி பூஜை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, பக்தா்கள் அக்னி சட்டி ஏந்தி நோ்த்திக் கடன் செலுத்தினா். அப்போது, அக்னி சட்டியை அவா்கள் தலையில் ஏந்தி கோயிலை வலம் வந்தனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கோயில் அறக்கட்டளைச் செயலா் ஆறு.இலட்சுமண சுவாமிகள் மற்றும் சித்திரை மாத அமாவாசை உற்சவ குழுவினா் பூஜைகளை மேற்கொண்டனா்.

Updated On: 9 May 2024 1:29 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன்...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அலை மோதிய பக்தர்கள் கூட்டம்..!
  3. ஈரோடு
    நம்பியூர் பகுதியில் வெளுத்துவங்கிய மழையால் உடைந்த குளம்..!
  4. ஈரோடு
    அந்தியூர் பெரிய ஏரியில் சிக்கிய 17 கிலோ எடை கொண்ட ராட்சத கட்லா
  5. ஈரோடு
    சென்னிமலை அருகே ரயில்வே நுழைவு பாலத்தில் தேங்கிய நீரில் மூழ்கிய...
  6. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  7. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  8. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  9. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!