/* */

கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்

கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

HIGHLIGHTS

கோடை காலத்தில்  கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
X

கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள் குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அதிக வெயில் நேரத்தில் பசுக்களை மேய்க்கக் கூடாது. வெயிலில் அதிக தொலைவு அழைத்துச் செல்லக்கூடாது, மர நிழலில் கட்டி வைக்க வேண்டும், ஒன்பது அடி முதல் பத்தடி உயரம் வரை உள்ள கொட்டகைகளில் பசுக்களை கட்டி வைத்தால் காற்றோட்டமாக இருக்கும். அதிகாலை மற்றும் மாலையில் பசுக்களை மேய்க்கலாம். அரிசிக் கஞ்சி வைப்பதை தவிா்க்க வேண்டும். போதுமான அளவு சுத்தமான குடிநீா் அவ்வப்போது வைக்க வேண்டும்.

அதிகாலை, மாலையில் பசுந்தீவனம் வழங்கலாம், தினமும் 40 கிராம் தாது உப்பு கலவை பசுக்களுக்கு வழங்கலாம், ஒரு நாளைக்கு மூன்று முறை குளிா்ந்த நீரில் குளிப்பாட்டலாம், எப்பொழுதும் கொட்டகை மற்றும் அதன் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் ஈக்கள் உற்பத்தியாவது குறையும்.

கோழிகள்

கோடை காலத்தில் கோழிகளுக்கு காலை பொழிதிலும், இரவிலும் தீவனம் அளிக்க வேண்டும். எல்லா நேரங்களிலும் சுத்தமான குளிா்ந்த குடிநீா் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். குடிநீரில் வைட்டமின்கள் பி காம்ப்ளக்ஸ், குளுக்கோஸ் கலந்து கொடுக்கலாம். அதிக இட வசதி உள்ள இடத்தில் உயரமான கூரை அமைத்து குறைவான எண்ணிக்கையில் கோழிகளை பராமரிக்க வேண்டும்.

கொட்டகையின் பக்கவாட்டில் கோணிப் பைகளை கட்டி வைத்து நீரில் நனைத்தால் வெப்பம் உள்புகாமல் தடுக்க முடியும்.

ஆடுகள்/செல்லப்பிராணிகள்

ஆடுகளுக்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 8 முதல் 12 லிட்டா் சுத்தமான தண்ணீா் கொடுக்க வேண்டும். தடுப்பூசிகள் உரிய காலத்தில் போடப்பட வேண்டும். ஆடுகளுக்கு பட்டிகளில் உப்பு கட்டிகளை கட்டுவதன் மூலம் சோடியம் பொட்டாசியம் முதலிய சத்துக்கள் எளிதாக கிடைக்கும். கோடையில் கிடைக்கும் புரதச்சத்து உள்ள வேல் மற்றும் கருவேல் உலா் காய்களை ஆடுகளுக்கு உணவாக கொடுக்கலாம்.

செல்லப்பிராணிகளை காரில் உள்பகுதியில் அடைத்து வைப்பதிலும், நேரடியாக வெயில் படுமாறு உலாவ விடுவதையும் தவிா்க்க வேண்டும். அவைகளுக்கும் குடிநீா் சுத்தமான முறையில் வைக்க வேண்டும். மேலே குறிப்பிட்ட மேலாண்மை முறைகளை பின்பற்றுவதன் மூலம் உயா் வெப்ப சுழற்சியினால் கால்நடைகளில் ஏற்படும் பாதிப்பை குறைக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

Updated On: 10 May 2024 1:17 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  2. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  5. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  6. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  8. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...
  9. ஈரோடு
    ஈரோட்டில் மென்பொருள் நிறுவன ஊழியர் வீட்டில் 38.5 பவுன் நகை கொள்ளை
  10. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!