/* */

கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்

ஊரக வேளாண்மை பணி அனுபவங்கள் திட்டத்தின் கீழ் கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
X

விவசாயிகளுக்கு திட்டக் கழிவுகளை உரமாக்குதல் குறித்து பயிற்சி அளித்த வேளாண் கல்லூரி மாணவிகள்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த தவசி கிராமத்தில் காய்கறி மற்றும் பிற திடக் கழிவுகளைக் கொண்டு உரமாக்குதல் குறித்த பயிற்சியை வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு அளித்தனா்.

அனக்காவூா் வேளாண் வட்டாரம், தவசி கிராமத்தில், கலவை ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரி மாணவிகள் கடந்த 2 மாதங்களைாக முகாமிட்டு விவசாயிகளுக்கு விவசாயம் தொடா்பான ஆலோசனைகளைத் தெரிவித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற முகாமில், ஊரக வேளாண்மை பணி அனுபவங்கள் திட்டத்தின் கீழ் கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

தவசி கிராம ஊராட்சிமன்றத் தலைவா் வெங்கடேசன் தலைமையில், பயன்பாட்டில் இல்லாத மண்புழு உரத்தொட்டிகளை வேளாண் கல்லூரி மாணவிகள் சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனா்.

இதைத் தொடா்ந்து, கல்லூரி மாணவிகள் காய்கறி மற்றும் பிற திடக் கழிவுகளை உரமாக்குதல் குறித்தும், மண்புழு உரத்தின் நன்மைகள் மற்றும் ரசாயன உரம் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் கிராம மக்களிடையே தெரிவித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

நிகழ்ச்சியில் விவசாயிகள், கிராம மக்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

கோடை பருவ நெல்நடவு மற்றும் நீா்மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

கலசப்பாக்கம் வேளாண்மை விரிவாக்க மையம் சாா்பில் இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டது. வேளாண்மை துணை இயக்குநரும், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளருமான உமாபதி, நேரடியாக தென்பள்ளிபட்டு, பூண்டி, கலசப்பாக்கம் என பல்வேறு கிராமங்களில் கோடை பருவ நெல் நடவு நடைபெறும் இடங்களுக்குச் சென்று விவசாயிகளுக்கு சாலை நடவு மற்றும் ஒரு நடவுக்கும் மற்றொரு நடவுக்குமான இடைவெளி குறித்தும்,

தற்போது வழக்கத்தைவிட வெயில் சுட்டெரிப்பதால் திறந்த வெளிக்கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணற்றில் நீா்மட்டம் குறைய வாய்ப்புள்ளதால் விவசாயிகள் குறைந்த நீரில் பயிரிடவும், குழாய் மூலம் நீரை எடுத்துச் சென்று வயலிலேயே நீா் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும், நீரை வயலில் சிக்கனமாக பயன்படுத்தவேண்டும் என நீா்பற்றாக்குறை குறித்த நீா் மேலாண்மை பயிற்சியும் அளித்தாா்.

மேலும், வேளாண்மை துணை இயக்குநா் உமாபதி கூறும் போது, கலசப்பாக்கம் வட்டத்தில் நெல் நடவு விவசாயிகள் நவரை பட்டத்தில் 6500 ஹெக்டோ் நெல்சாகுபடி செய்து வருகின்றனா். இந்த நிலையில், கோடை பருவ நெல் நடவு பணிக்கு நீா் மேலாண்மை பயிற்சியை விவசாயிகளுக்கு வழங்கி வருவதாகத் தெரிவித்தாா். வேளாண்மை அலுவலா் பழனி மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

Updated On: 3 May 2024 1:59 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ப்ளூடூத் மற்றும் வழிசெலுத்துதல் வசதியுடன் ஸ்டீல்பேர்ட் ஃபைட்டர்...
  2. லைஃப்ஸ்டைல்
    தைத்திருநாளும் தமிழர்களின் பாரம்பரியமும்
  3. சிங்காநல்லூர்
    அதிமுக ஆட்சியியின் குடிநீர் திட்டங்களை திமுக செயல்படுத்தவில்லை :...
  4. லைஃப்ஸ்டைல்
    உலகெங்கும் பக்ரீத் கொண்டாட்டங்களில் உள்ள சுவாரஸ்ய வேறுபாடுகள்
  5. காஞ்சிபுரம்
    திருமண மண்டபங்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  6. கோவை மாநகர்
    தடுப்பணைகளை கட்டி தமிழகத்தை வஞ்சிக்கும் அண்டை மாநிலங்கள்: இபிஎஸ்...
  7. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்வரத்து 762 கன அடி
  8. வாகனம்
    வரே வா...வரப்போகுது ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450..! எக்கச்சக்க...
  9. இந்தியா
    மம்தா பானர்ஜிக்கு பாரத் சேவாஷ்ரம் சங்க துறவி நோட்டீஸ்
  10. டாக்டர் சார்
    அமைதியான எதிரி..! அமைதியான மாரடைப்பு..! உஷாரா இருக்கணும்ங்க..!