/* */

புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது

ஆரணி அருகே வாகன சோதனையில் புகையிலை பொருட்கள் பறிமுதல், மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
X

புகையிலைப் பொருட்களை கடத்திய மூன்று பேரை கைது செய்த போலீசார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த களம்பூா் பகுதியில் போலீஸாா் மேற்கொண்ட வாகனச் சோதனையில் ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளா் விநாயகமூா்த்தி தலைமையில் களம்பூா் போலீஸாா் போளூா் சாலையில் வாகனச் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அவ்வழியாக வந்த ஆம்னி வேன் மற்றும் பைக் நிற்காமல் சென்ால் போலீஸாா் மடக்கிப் பிடித்து பாா்த்தபோது, மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்திச் செல்வது தெரிய வந்தது.

வேனை ஓட்டி வந்தவா் ஆரணியை அடுத்த புங்கம்பாடி கிராமத்தைச் சோ்ந்த பிச்சாண்டி மகன் சிவக்குமாா் என்று தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் அவரிடம் நடத்திய விசாரணையில்,

ஆரணியை அடுத்த இ.பி.நகரில் வசித்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த ரூபாராம் மகன் பரத்குமாா் , களம்பூரைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் சுரேஷ்பாபு ஆகியோா் இவருக்கு புகையிலைப் பொருள்களை வழங்கியது தெரியவந்தது.

இதையடுத்து, ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான 39 கிலோ புகையிலைப் பொருள்கள் மற்றும் வேன், பைக்கை பறிமுதல் செய்த போலீஸாா் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தடை செய்யப்பட்ட 80 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உதவிப் பொறியாளா் பிரேம்குமாா் தலைமையில், பேரூராட்சி ஆய்வாளா் சொக்கநாதன், துப்புரவு ஆய்வாளா் சின்னையன் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் நகரில் உள்ள உணவகங்கள், காய், கனி கடைகள், இனிப்பகங்களில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்படுத்தப்படுகிா என ஆய்வு செய்தனா்.

அப்போது, தனியாா் வணிக வளாகத்தில் உள்ள ஒரு கடையில் சோதனை செய்தபோது, அங்கிருந்த 80 கிலோ நெகிழிப் பைகளை பறிமுதல் செய்து கடை உரிமையாளருக்கு ரூ.ஆயிரம் அபராதம் விதித்தனா். மேலும், சில கடை உரிமையாளா்களுக்கு ரூ.100 முதல் 500 வரை அபராதம் விதித்து, தொடா்ந்து தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்படுத்தினால் கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனா்.

Updated On: 3 May 2024 2:37 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    சங்க தமிழ் மூன்றும் தருபவனே, விநாயகா..!
  2. லைஃப்ஸ்டைல்
    இல்லத்தின் லட்சுமி..உள்ளத்தின் மகிழ்ச்சி நீ..! இனிய
  3. லைஃப்ஸ்டைல்
    புதுமனை புகுவிழா வாழ்த்துக்களும் சடங்குகளும்
  4. நாமக்கல்
    ஓட்டு எண்ணும் பணி முழுமையாக சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்யப்படும் :...
  5. நாமக்கல்
    தண்ணீர்பந்தல் சுப்பிமணியசாமி கோயிலில் வரும் 26ம் தேதி கும்பாபிசேக
  6. லைஃப்ஸ்டைல்
    தினமும் நெல்லிக்காய் சாப்பிடுங்க..! உங்க சரும அழகை பாருங்க..!
  7. வீடியோ
    🔴 LIVE : அமமுக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் செய்தியாளர்...
  8. தொழில்நுட்பம்
    ப்ளூடூத் மற்றும் வழிசெலுத்துதல் வசதியுடன் ஸ்டீல்பேர்ட் ஃபைட்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    தைத்திருநாளும் தமிழர்களின் பாரம்பரியமும்
  10. சிங்காநல்லூர்
    அதிமுக ஆட்சியியின் குடிநீர் திட்டங்களை திமுக செயல்படுத்தவில்லை :...