/* */

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்கான நீர் திறப்பு வினாடிக்கு 1,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
X

மேட்டூர் அணை.

மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்கான நீர் திறப்பு வினாடிக்கு 1,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து வினாடிக்கு 200 கன அடியாக நீடிக்கிறது.

இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று (மே.6) திங்கட்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 49 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (மே.7) செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 54 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை முதல் நீர் திறப்பு வினாடிக்கு 1,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

அணைக்கு வரும் நீரின் அளவை விட திறப்பு பலமடங்கு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 52.30 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று காலை 52.10 அடியானது. நீர் இருப்பு 19.16 டிஎம்சியாக உள்ளது. மேலும், அணைப் பகுதியில் 23.6 மி.மீ மழைப்பொழிவு பதிவாகி உள்ளது.

Updated On: 7 May 2024 4:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    கோவாக்சின் போட்டவர்களும் தப்ப முடியாதாம்..! புதிய வதந்தி..!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை...
  4. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் பறிமுதல்..!
  5. கீழ்பெண்ணாத்தூர்‎
    வாசவி அம்மன் ஜெயந்தி விழா..!
  6. நாமக்கல்
    நிதி நிறுவன ஊழியரை தாக்கி வழிப்பறி- வாலிபர் கைது: சிறுவன் உட்பட 3...
  7. கலசப்பாக்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை விவசாயிகள் மகிழ்ச்சி..!
  8. ஆரணி
    முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா..!
  9. காஞ்சிபுரம்
    வாலாஜாபாத் அருகே சாலை விபத்தில் லாரி ஓட்டுனர் பலி...!
  10. காஞ்சிபுரம்
    வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன்...