பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு தற்கொலை
Family diputs, Mesthri hanged himself
HIGHLIGHTS
பரமத்தி அருகே குடும்ப தகராறு காரணமாக கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா, பரமத்தி அருகே உள்ள ஓவியம்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது33) கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி திவ்யா (30). இவர்களுக்கு நிகித்(12), கவுதிக்(8) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். பிரகாஷ் கட்டிட மேஸ்திரி வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வரும் போதெல்லாம் தினந்தோறும் மது அருந்திவிட்டு வந்ததால் கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பிரகாஷிடம் மனைவி திவ்யா கோபித்துக்கொண்டு தனது இரண்டு மகன்களுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். கடந்த ஒரு வருடமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிரகாஷ் மது அருந்தி விட்டு பெற்றோர்களிடம் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறி வந்துள்ளார். கடந்த 3ம் தேதி காலை பிரகாஷ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். பிரகாஷின் பெற்றோர்கள் வேலைக்குச் சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு வந்தபோது, வீட்டில் உள்ள விட்டத்தில் பிரகாஷ் சேலையால் தூக்குப் போட்டு தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே பிரகாஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ப.வேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.