/* */

மணல் திருட்டிற்கு பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூர் காவிரி ஆற்றில், மணல் திருட்டிற்கு பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

மணல் திருட்டிற்கு பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
X

பைல் படம் 

பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூர் காவிரி ஆற்றில், மணல் திருட்டிற்கு பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்து தப்பி ஓடிய 3பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூர் காவிரி ஆற்றில் சிலர் மணல் திருட்டில் ஈடுபட்டுள்ளதாக பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி தலைமையில் எஸ்ஐ குமார் மற்றும் போலீசார், பொத்தனூர் காவிரி ஆற்றுப் பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு மணல் திருட்டில் ஈடுபட்டிருந்த 3 பேரும் போலீசாரைக் கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். அதனைத் தொடர்ந்து அங்கு மணல் மூட்டைகளுடன் நின்று கொண்டிருந்த 3 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்

Updated On: 27 April 2024 2:15 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கோடை கால இலவச தடகளப் பயிற்சி முகாம்
  3. ஆரணி
    போக்ஸோவில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்றவா் விடுதலை
  4. ஈரோடு
    திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
  5. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  6. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  7. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  10. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்