/* */

நகராட்சி துப்புரவு பணியாளர் தற்கொலை!

குமாரபாளையம் நகராட்சி துப்புரவு பணியாளர் தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

நகராட்சி துப்புரவு பணியாளர் தற்கொலை!
X

நகராட்சி துப்புரவு பணியாளர் தற்கொலை

குமாரபாளையம் நகராட்சி துப்புரவு பணியாளர் தற்கொலை செய்து கொண்டார்.

குமாரபாளையம் நகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருபவர் சிவா, 45. இவரது மனைவி ஜாஸ்மின் ஹேமா, 39. சிவா தினமும் குடித்து விட்டு வருவதால், கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது. நேற்றுமுன்தினம் பள்ளிபாளையம் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் முடிந்து, இரவு 08:00 மணியளவில், குமாரபாளையம் ராஜாஜி குப்பத்தில் உள்ள வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீடு உள் பக்கமாக தாழ்பாள் போடப்பட்டிருந்தது. உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, வீட்டில் உள்ள அறையில், தன் லுங்கியில் தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் சிவா இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். கீழே இறக்கி, குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று காட்டிய போது, இவரை பரிசோதித்த டாக்டர் , சிவா இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து இவரது மனைவி, ஜாஸ்மின் ஹேமா குமாரபாளையம் போலீசில் புகார் கொடுக்க, போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Updated On: 8 May 2024 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு