/* */

பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா நடந்தது.

HIGHLIGHTS

பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு   பாராட்டு விழா!
X

படவிளக்கம் :

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு குமாரபாளையத்தில் பாராட்டு விழா நடந்தது.

பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா நடந்தது.

குமாரபாளையத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா வட்டார தலைவர் சுப்பிரமணியம் தலைமையில் நடந்தது.

பணி நிறைவு பெறும் குள்ளநாயக்கன்பாளையம் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாசிலாமணி, அன்னை சத்யா நகர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் குமுதம், வெப்படை தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர் கண்ணன் ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

மாவட்டச் செயலாளர் மாதேஸ் பேசியதாவது:

ஆசிரியர் பணி அனைத்து பணிகளிலும் சிறந்த பணியாகும். தனக்கு சிகிச்சை செய்த டாக்டரை, பல வருடம் கழித்து நேரில் பார்த்து, அன்று நீங்கள் சிகிச்சை செய்தீர்கள், என்று யாரும் கூறுவது இல்லை. அந்த மருத்துவமனையை போய் பார்ப்பது இல்லை. நீதிமன்ற வழக்கில் நமக்கு சாதகமாக தீர்ப்பு வாங்கி கொடுத்த வக்கீல், மற்றும் நீதிபதியை யாரும் பல வருடங்கள் கழித்து நேரில் போய் பார்த்து, அன்று எனது வழக்கில் வாதாடினீர்கள், நீங்கள் நல்ல தீர்ப்பு வழங்கினீர்கள், என்று யாரும் நீதிபதியை பார்த்து சொல்வது இல்லை. நீதிமன்றம் போய் பார்ப்பதும் இல்லை. ஆனால், தான் படித்த பள்ளியை பார்க்க வேண்டும் என்று போய் பார்ப்பது, தன்னால் ஆன உதவியை பள்ளிக்கு செய்வது, தனக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்களை நேரில் சந்தித்து வணங்கி ஆசி பெறுவது என்பது இன்றும் நடந்து வருகிறது. இது என்றும் நடக்கும்.

உங்கள் பணி ஓய்வு காலத்தை மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும்படி அமைத்து கொண்டு சிறந்து வாழ வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

வட்டார செயலர் பிரபு, ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் மாநில இணை செயலாளர் நல்லாக்கவுண்டர், மாவட்டத் தலைவர் கலைச்செல்வன், மாவட்ட பொருளாளர் மலர்விழி, முன்னாள் வட்டார தலைவர் மாரி முத்து, முன்னாள் மாவட்ட செயலாளர் குமார் உள்பட பலர் வாழ்த்தி பேசினர். பணி நிறைவு பெறும் ஆசிரியர்கள் ஏற்புரை நிகழ்த்தினர்.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு குமாரபாளையத்தில் பாராட்டு விழா நடந்தது.

Updated On: 27 April 2024 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  3. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  4. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  5. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  6. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  7. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  10. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!