/* */

ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகே காட்டு யானை தாக்கி காளை மாடு உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகே காட்டு யானை தாக்கி காளை மாடு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகே காட்டு யானை தாக்கி காளை மாடு உயிரிழப்பு
X

காளை மாட்டை தாக்கிய காட்டு யானை.

கடம்பூர் அருகே காட்டு யானை தாக்கி காளை மாடு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் வனச்சரக மலைப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. பகல் மற்றும் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவது வாடிக்கையாகி உள்ளது.

இந்நிலையில், வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை யானை குத்தியாலத்தூர் ஊராட்சி இருட்டிபாளையம் திண்ணையூரில் புகுந்து அங்கு பெருமாள் என்பவரின் வீட்டின் முன்பு கட்டி இருந்த காளை மாட்டை தாக்கி உள்ளது. இதில் அந்த காளை மாடு பரிதாபமாக உயிரிழந்தது.

இறந்த காளை மாட்டிற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மலை கிராம மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள், விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மீண்டும் ஒற்றை யானை ஊருக்குள் வந்து விடுமோ என அச்சத்தில் உள்ளனர்.

மேலும், இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க, காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Updated On: 24 April 2024 7:44 AM GMT

Related News

Latest News

  1. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  4. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  5. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  7. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  9. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  10. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...