/* */

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு

டாஸ்மாக் கடையால் தினசரி பிரச்சனை ஏற்பட்டு வருவதாலும், பொதுமக்கள் நிம்மதியாக அப்பகுதியில் வசிக்க முடியவில்லை என புகார்

HIGHLIGHTS

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
X

டாஸ்மாக்கை அகற்ற கோரிக்கை

கோவை ரயில் நிலையம் அருகே உள்ள லங்கா கார்னர் பகுதியில் டாஸ்மாக் மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மது குடிக்க வரும் மது பிரியர்கள் தினசரி அப்பகுதியில் இருக்கும் பொது மக்களிடம் தகராறு செய்து வாக்குவாதத்தில் வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 2 நாட்கள் முன்பு சென்னை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் டாஸ்மாக் கடையில் குடித்து விட்டு அப்பகுதியில் இருக்கும் பொது மக்களிடம் தகராறு ஈடுபட்டதாக தெரிகிறது. மேலும் 3 நபர்களை மது பாட்டில்களால் தாக்கி உள்ளனர். இதில் காயம் அடைந்த பொது மக்களை உடனடியாக அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அந்தப் பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையால் தினசரி பிரச்சனை ஏற்பட்டு வருவதாலும், பொதுமக்கள் நிம்மதியாக அப்பகுதியில் வசிக்க முடியவில்லை என்றும் கடைகள் நடத்த முடியவில்லை என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இது குறித்து பலமுறை கோவை மாவட்ட ஆட்சியரிடமும், காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கும் மேற்கொள்ளவில்லை என்றும் மீண்டும் மனு கொடுக்க வந்ததாக தெரிவித்தனர். கோவை மாநகர் காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.

லங்கா கார்னர் பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையில் 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், இதனால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் நிலவி வருவதாக பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்

Updated On: 8 May 2024 2:45 PM GMT

Related News

Latest News

  1. வாகனம்
    வரே வா...வரப்போகுது ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450..! எக்கச்சக்க...
  2. இந்தியா
    மம்தா பானர்ஜிக்கு பாரத் சேவாஷ்ரம் சங்க துறவி நோட்டீஸ்
  3. டாக்டர் சார்
    அமைதியான எதிரி..! அமைதியான மாரடைப்பு..! உஷாரா இருக்கணும்ங்க..!
  4. அரசியல்
    'மேற்கு வங்க காங்கிரசை காப்பாற்றுவதே எனது போராட்டம்': கார்கேவிற்கு...
  5. உலகம்
    ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் உயிரிழப்பு..!
  6. விளையாட்டு
    ஆர்சிபி வீரர்களுடன் கைகுலுக்குவதைத் தவிர்த்த தோனி! தேடிசென்று...
  7. இந்தியா
    ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் பேரணியில் பேசாமல் வெளியேறியது...
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 318.30 மி.மீ மழை பதிவு