/* */

குடியரசுத்தலைவரை சந்தித்த இந்தியப் பொருளாதாரப் பணிப் பயிற்சி அதிகாரிகள்

இந்தியப் பொருளாதாரப் பணிப் பயிற்சி அதிகாரிகள் குடியரசுத்தலைவரை சந்தித்தனர்.

HIGHLIGHTS

குடியரசுத்தலைவரை சந்தித்த இந்தியப் பொருளாதாரப் பணிப் பயிற்சி அதிகாரிகள்
X

இந்தியப் பொருளாதாரப் பணிப் பயிற்சி அதிகாரிகள் குடியரசுத்தலைவரை சந்தித்தனர்.

இந்தியப் பொருளாதாரப் பணிப் பயிற்சி அதிகாரிகள் குடியரசுத்தலைவரை சந்தித்தனர்.

இந்தியப் பொருளாதாரப் பணிப் பயிற்சி (ஐ.இ.எஸ்) அதிகாரிகள் குழுவினர் (2022 மற்றும் 2023 தொகுப்புகள்) இன்று (ஏப்ரல் 16, 2024) குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவைக் குடியரசுத்தலைவர் மாளிகையில் சந்தித்தனர்.

அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய குடியரசுத்தலைவர், நாட்டின் வளர்ச்சியில் பொருளாதார மேம்பாடு முக்கியப் பங்கு வகிக்கிறது என்றார். பேரியல் மற்றும் நுண் பொருளாதாரக் குறியீடுகள் முன்னேற்றத்தின் பயனுள்ள அளவீடுகளாகக் கருதப்படுகின்றன. எனவே, அரசின் கொள்கைகளையும், திட்டங்களையும் பயனுள்ளவையாக மாற்றுவதில் பொருளாதார வல்லுநர்களின் பங்கு முக்கியமானதாகும். உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக மாறுவதை நோக்கி இந்தியா முன்னேறி வருவதால், அவர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்தவும், அவற்றை முழுமையாகப் பயன்படுத்தவும் வரும் காலங்களில் எண்ணற்ற வாய்ப்புகளைப் பெறுவார்கள் என்று அவர் அதிகாரிகளிடம் கூறினார். இந்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு அவர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

2022 மற்றும் 2023 தொகுப்புகளில் இடம் பெற்றுள்ள ஐ.இ.எஸ் அதிகாரிகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண் அதிகாரிகள் என்பதைக் குறிப்பிட்டு குடியரசுத்தலைவர் மகிழ்ச்சி தெரிவித்தார். பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பது இந்தியாவின் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான தீர்மானத்தை நிறைவேற்ற உதவும் என்று அவர் கூறினார். பெண்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக பெண் அதிகாரிகள் பாடுபட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

கொள்கை தொடர்பான ஆலோசனைகளை வழங்கும்போது அல்லது பணியிடத்தில் எந்தவொரு முடிவையும் எடுக்கும்போது, நாட்டில் உள்ள ஏழை மற்றும் பின்தங்கிய பிரிவினரின் நலனை இளம் அதிகாரிகள் மனதில் கொள்ள வேண்டும் என்பதைக் குடியரசுத்தலைவர் வலியுறுத்தினார்.

ராம நவமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்குக் குடியரசு துணைத்தலைவர் வாழ்த்து

இகுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ராம நவமியை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பகவான் ராமரின் வாழ்க்கை நீதி, ஒருமைப்பாடு மற்றும் சகிப்புத்தன்மைக்கு காலத்தால் அழியாத உதாரணமாக விளங்குகிறது. அவரது கொள்கைகள் பலருக்குப் பல யுகங்களாக வழிகாட்டியுள்ளன; நல்லொழுக்க வாழ்க்கையை நடத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன. இன்று ராமபிரான் ஏற்றுக்கொண்ட நிலைபேறுடைய மாண்புகளை நாம் சிந்தித்து, அவர் காட்டிய பாதையில் நம்மை மீண்டும் அர்ப்பணிப்போம்.

வளமான மற்றும் வலுவான பாரதத்தை உருவாக்க நாம் உறுதியுடன் பணியாற்றும் அதே வேளையில், ஸ்ரீ ராம பிரானின் நிலைபேறுடைய கொள்கைகளால் நமது வாழ்க்கை வழிநடத்தப்படட்டும்.

Updated On: 16 April 2024 3:16 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...