/* */

உலகின் மிகப்பெரிய மாணிக்க கல் ஏலம்: ரூ.286 கோடிக்கு விற்பனை

அமெரிக்காவில் உலகின் மிகப்பெரிய மாணிக்க கல் ரூ.286 கோடிக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

உலகின் மிகப்பெரிய மாணிக்க கல் ஏலம்: ரூ.286 கோடிக்கு விற்பனை
X

எஸ்ட்ரெலா டி ஃபுரா (புறாவின் இரத்தம் )என்று அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய மாணிக்க கல் சமீபத்தில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பபட்டது. கடந்த ஜூலை மாதம் மொசாம்பிக்கில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கல் குறிப்பிடத்தக்க விலையைப் பெற்று சாதனை படைத்துள்ளது.


முதலில் 101 காரட் எடை கொண்ட இந்த கல், பின்னர் 55 காரட் எடை கொண்ட குஷன் வடிவ ரத்தினமாக வெட்டப்பட்டுள்ளது. மேலும் சிறந்த தெளிவு மற்றும் நிறத்தைக் கொண்டுள்ளது. இது பொதுவாக "புறாவின் இரத்தம்" என்று குறிப்பிடப்படும் பிரகாசமான சிவப்பு நிறத்தைக் காட்டுகிறது. மொசாம்பிக் மாணிக்கங்களுக்கான புதிய மற்றும் பிரபலமானதாக பாரம்பரிய பர்மிய தோற்றத்துடன் உருவெடுத்துள்ளது.


இதுவரை ஏலத்தில் தோன்றிய மிகப்பெரியதும், மிகவும் மதிப்புமிக்கதும் மான எஸ்ட்ரெலா டி ஃபுரா என்ற மாணிக்க கல், நேற்று (ஜூன் 8ம் தேதி) நியூயார்கில் ரூ.286 கோடிக்கு ($34.8 மில்லியனுக்கு) ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு புதிய சாதனையை படைத்துள்ளது. "Estrela de Fura 55.22" என்றால் போர்ச்சுக்கீசிய மொழியில் Fura நட்சத்திரம் என்று பொருள்.


இதற்கு முன்னர் 2015ம் ஆண்டு "சன்ரைஸ் ரூபி" என்ற 25.59 காரட் பர்மிய மாணிக்க கல் 30.3 மில்லியன் டாலருக்கு ஜெனிவாவில் நடைபெற்ற ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Updated On: 9 Jun 2023 7:33 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...