"மூணாப்பு படிச்சிட்டியா..? போதும் போ..!" பெண் கல்விக்கு தடை போட்ட தாலிபான்கள்..!
தாலிபான்கள் இப்போது பெண்கள் மூன்றாம் வகுப்பிற்கு மேல் படிக்க தடை விதித்துள்ளனர். இது ஆஃகன் பெண்களுக்கான அடுத்த அடி.
HIGHLIGHTS
Taliban ban girl students from attending school beyond third grade in Tamil, Taliban now ban girl students from attending school beyond third grade, Taliban ban girl students beyond third class, Crackdown against women in Afghan
பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் 10 வயதுக்கு மேற்பட்ட பெண்களை ஆரம்பப் பள்ளியில் படிக்க அனுமதிக்கக்கூடாது என்று தலிபான்கள் இப்போது புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
பெண்களின் உரிமைகள் மீதான மற்றொரு கடுமையான அடக்குமுறையின் தொடர்ச்சியாக தலிபான்கள் இப்போது மூன்றாம் வகுப்புக்கு மேல் பெண்கள் பள்ளிக்குச் செல்வதைத் தடை செய்துள்ளனர்.
இதற்கு முன் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு வரை பெண்கள் படிக்க அனுமதிக்கப்பட்டிருந்தனர். பிபிசி பாரசீக அறிக்கையின்படி, தாலிபான்கள் இப்போது பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பெண்கள் 10 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தாலும், ஆரம்பப் பள்ளியில் சேர அனுமதிக்கக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளனர்.
11 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்கள் பள்ளிகளுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்ட 683 நாட்களுக்குப் பிறகும், அவர்கள் பல்கலைக்கழகங்களுக்குச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்ட 223 நாட்களுக்குப் பிறகும் சமீபத்திய பெண்கள் மீதான தாக்குதல் அடுத்த அடியாக விழுந்துள்ளது.
பிபிசி வெளியிட்ட அறிக்கையின்படி, "10 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் ஆரம்பப் பள்ளிகளில் படிக்க அனுமதிக்கப்படுவதில்லை" என்பதை உறுதிப்படுத்துமாறு பள்ளிகளின் முதல்வர்கள் மற்றும் குறுகிய கால பயிற்சி வகுப்புகளையும் கல்வி அமைச்சக அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதற்கிடையில், கல்வித் துறையில் பணிபுரியும் அரசு சாரா உதவி நிறுவனங்களின் எழுத்தறிவு வகுப்புகள் நடத்தும் அதிகாரிகளுக்கும் அத்தகைய பரிந்துரைகள் மற்றும் உத்தரவுகள் வந்துள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் பிபிசிக்கு தெரிவித்தார்.
ஒரு சில மாகாணங்களில், நல்லுறவு மற்றும் மதுவிலக்கு அமைச்சகத்தின் உள்ளூர் அதிகாரிகள், பெண்கள் பள்ளிகளை நடத்தி வரும் முதல்வர்களிடம், பெண்களை அவர்களின் வயதின் அடிப்படையில் பிரித்து, மூன்றாம் வகுப்புக்கு மேல் உள்ள குழந்தைகளை திருப்பி அனுப்பச் சொன்னதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஆறாம் வகுப்பு மாணவி ஒருவர், பிபிசியிடம் பேசுகையில், "உயரமான அல்லது 10 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் பள்ளிக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டீர்கள் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது" என்று கூறினார்.
சமீபத்திய அடக்குமுறை பற்றிப் பேசிய தலிபான் பொது விவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் முகமது சாதிக் அகாஃப் பிபிசியிடம், "எங்கள் தரப்பில் இருந்து, நிர்வாகம் அத்தகைய செயலைச் செய்யவில்லை. அப்படி ஏதாவது செய்தால், அது கல்வி அமைச்சக தொடர்புடையதாக இருக்கும் என்றார் பொத்தாம்பொதுவாக.
தலிபான்களும் ஆப்கன் பெண்களின் இருண்ட எதிர்காலமும்
ஆப்கானிஸ்தானை தலிபான் கைப்பற்றிய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஆறாம் வகுப்புக்கு மேல் உள்ள பள்ளிகளில் படிக்கும் பெண்களை பள்ளிக்கு செல்லக்கூடாது என்று தடுத்து நிறுத்தியது. பெண்களின் கல்வி மற்றும் பணி வாழ்க்கை தொடர்பான சர்வதேச கூட்டங்களில் தலிபான் அதிகாரிகள் மென்மையான போக்கை அல்லது மென்மையான மொழியைப் பேசினாலும், தடை "தற்காலிகமானது" என்று வலியுறுத்திய போதிலும் பெண்கள் மீதான ஒடுக்குமுறை நடந்துகொண்டுதான் இருக்கிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலிபான் அரசு ஜபிஹுல்லா முஜாஹித், "சில பகுதிகளில், பெண்கள் பல்கலைக்கழகங்கள் மற்றும் பள்ளிகளுக்குச் செல்வதில் பிரச்னைகள் உள்ளன. அதற்கான பணிகள் தொடர்கின்றன. அது விரைவில் தீர்க்கப்படும்" என்று கூறினார்.
பள்ளிகளைத் தவிர, தாலிபான்கள் பெண்கள் அழகு நிலையங்களைத் தடைசெய்தது, சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகளில் பணிபுரிவதைத் தடுத்தது. தலிபான்கள் பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவதை நிறுத்திவிட்டு, பர்தா மற்றும் ஆண் துணை இல்லாமல் நாட்டில் டாக்சி சவாரி செய்ய தடை விதித்தனர்.
ஆஃகன் பெண்கள் படும் இன்னல்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்புவோம்.