27 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவில் உலக அழகி போட்டி

இந்தியாவில் 27 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் உலக அழகிப்போட்டி நடைபெறுகிறது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
27 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவில் உலக அழகி போட்டி
X

உலக அழகி போட்டி பைல் படம்.

'மிஸ் வேர்ல்ட்' எனப்படும் உலக அழகி போட்டி ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. கடைசியாக நம் நாட்டில் கர்நாடக மாநிலம் பெங்களூரில், 1996ல் உலக அழகி போட்டி நடந்தது. இந்நிலையில், 2023ம் ஆண்டுக்கான உலக அழகியை தேர்வு செய்வதற்கான இறுதி போட்டி, வரும் நவம்பரில் நம் நாட்டில் நடக்கவுள்ளது. இது, 71வது உலக அழகி போட்டி. இது குறித்து உலக அழகி போட்டிக்கான அமைப்பின் தலைவர் ஜூலியா மோர்லி கூறியதாவது: மீண்டும் இந்தியாவில் உலக அழகி போட்டி நடக்கவுள்ளது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். ஒரு மாதத்துக்கு நடக்கும் இந்த போட்டியில், 130 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். தற்போது ஐரோப்பிய நாடான போலந்தைச் சேர்ந்த கரோலினா உலக அழகியாக உள்ளார். இவர், தற்போது இந்தியா வந்துள்ளார். அவர் கூறுகையில், ''உலகில் மிகச் சிறந்த விருந்தோம்பல் கலாசாரம் உடைய நாடு, இந்தியா. இதை என் தாய் வீடு போல் உணர்கிறேன். இங்கு உலக அழகிப் போட்டி நடக்கவுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்றார்.

Updated On: 8 Jun 2023 4:15 PM GMT

Related News

Latest News

  1. டாக்டர் சார்
    presentation cephalic meaning in tamil குழந்தையின் தலையை இயற்கையாக...
  2. இந்தியா
    சத்தியம், சிவம், சுந்தரம்! ராகுல்காந்தி சிறப்பு கட்டுரை..!
  3. இந்தியா
    சுத்தமா? கிலோ எவ்வளவு? : 48 மணி நேரத்தில் 31 பேர் இறந்த மகாராஷ்டிரா...
  4. லைஃப்ஸ்டைல்
    health quotes in tamil சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்:...
  5. சோழவந்தான்
    கிராம சபைக் கூட்டம் புறக்கணிப்பு: தலைவர் மீது புகார்.
  6. ஆன்மீகம்
    nainamalai temple சிவபெருமானின் முக்கிய தலமாக விளங்கும் நைனாமலைக்...
  7. தமிழ்நாடு
    மின்சார ரெயில்களில் ஏ.சி. பெட்டிகள்: தெற்கு ரயில்வே முடிவு
  8. இந்தியா
    மாணவர்களின் தற்கொலைகளை தடுக்கும் நலக்குழு: வழிகாட்டுதல்களை வெளியிட்டது...
  9. இந்தியா
    சிக்கிமில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்: 23 ராணுவ வீரர்கள் மாயம்
  10. தமிழ்நாடு
    இணையதள சேவை பாதிப்பு: சென்னை விமான நிலையத்தில் விமானங்கள்...