/* */

27 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவில் உலக அழகி போட்டி

இந்தியாவில் 27 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் உலக அழகிப்போட்டி நடைபெறுகிறது.

HIGHLIGHTS

27 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவில் உலக அழகி போட்டி
X

உலக அழகி போட்டி பைல் படம்.

'மிஸ் வேர்ல்ட்' எனப்படும் உலக அழகி போட்டி ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. கடைசியாக நம் நாட்டில் கர்நாடக மாநிலம் பெங்களூரில், 1996ல் உலக அழகி போட்டி நடந்தது. இந்நிலையில், 2023ம் ஆண்டுக்கான உலக அழகியை தேர்வு செய்வதற்கான இறுதி போட்டி, வரும் நவம்பரில் நம் நாட்டில் நடக்கவுள்ளது. இது, 71வது உலக அழகி போட்டி. இது குறித்து உலக அழகி போட்டிக்கான அமைப்பின் தலைவர் ஜூலியா மோர்லி கூறியதாவது: மீண்டும் இந்தியாவில் உலக அழகி போட்டி நடக்கவுள்ளது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். ஒரு மாதத்துக்கு நடக்கும் இந்த போட்டியில், 130 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். தற்போது ஐரோப்பிய நாடான போலந்தைச் சேர்ந்த கரோலினா உலக அழகியாக உள்ளார். இவர், தற்போது இந்தியா வந்துள்ளார். அவர் கூறுகையில், ''உலகில் மிகச் சிறந்த விருந்தோம்பல் கலாசாரம் உடைய நாடு, இந்தியா. இதை என் தாய் வீடு போல் உணர்கிறேன். இங்கு உலக அழகிப் போட்டி நடக்கவுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்றார்.

Updated On: 8 Jun 2023 4:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  2. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  3. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  4. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  5. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
  7. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்