/* */

இந்திய-ரஷ்ய கூட்டுறவு சிறப்பாக,மதிப்புமிக்க வகையில் மேலும் ஆழமாகும் -ரஷ்யா உறுதி

ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்பு குழு செயலாளர் நிகோலாய் பட்ருஷேவ், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.

HIGHLIGHTS

இந்திய-ரஷ்ய  கூட்டுறவு சிறப்பாக,மதிப்புமிக்க வகையில் மேலும்  ஆழமாகும் -ரஷ்யா உறுதி
X

ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்பு குழு செயலாளர் நிகோலாய் பட்ருஷேவ் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். 

ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்பு குழு செயலாளர் நிகோலாய் பட்ருஷேவ், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்தார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் வெளியுறவு அமைச்சரை முன்னதாக இந்த சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போது பலனளிக்கும் கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்றதாக இந்திய பிரதமரிடம் ரஷ்ய செயலாளர் பட்ருஷேவ் கூறினார். மேலும் இந்தியாவுடனான 'சிறப்பான மற்றும் மதிப்புமிக்க கூட்டை' மேலும் ஆழப்படுத்துவதற்கான ரஷ்யாவின் உறுதியை வெளிப்படுத்தினார்.

பிராந்தியத்தில் முக்கிய மாற்றங்கள் நடைபெற்று வரும் வேளையில் ரஷ்யா செயலாளர் பட்ருஷேவ் தலைமையிலான குழுவின் வருகைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். இந்திய-ரஷ்ய கூட்டின் மீது தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் அதிபர் புடினுக்கு தமது நன்றியை தெரிவிக்குமாறு ரஷ்ய செயலாளர் பட்ருஷேவிடம் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். இருதரப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியா வரவுள்ள அதிபர் புடினின் வருகையை தாம் ஆவலுடன் எதிர்பார்ப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

Updated On: 9 Sep 2021 10:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி