/* */

செய்யாத குற்றத்திற்கு 47 ஆண்டு சிறை..! 72 வயது முதியவர் விடுதலை..!

அமெரிக்காவில் செய்யாத குற்றத்துக்கு 47 ஆண்டுகளுக்கு பிறகு 72 வயது முதியவர் ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

HIGHLIGHTS

செய்யாத குற்றத்திற்கு 47 ஆண்டு சிறை..!  72 வயது முதியவர் விடுதலை..!
X

விடுதலையான லியோனார்ட் மேக்

செய்யாத குற்றத்திற்காக 47 ஆண்டுகள் சிறைவைக்கப்பட்ட ஒருவர் 72 வயதில் விடுவிக்கப்பட்டுள்ளார். அதன் பின்னணி என்ன ?

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் அமைந்துள்ளது கிரீன்பர்க். இங்கு கடந்த 1975-ம் ஆண்டு பள்ளியில் படிக்கும் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுகுறித்து அவரது குடும்பத்தார் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த அந்நாட்டு போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டது. அப்போது லியோனார்ட் மேக் என்ற கறுப்பினத்தை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தது.

அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, தான்தான் குற்றத்தை செய்ததாகவும் ஒப்புக்கொண்டார். அந்த காலத்தில் DNA சோதனை என்பது சாத்தியமில்லை என்பதால், குற்றத்தை ஒப்புக்கொண்ட லியோனார்ட் மேக் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆர்ஜ்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இப்படிப்போன நான் (முதல் படம்)இப்படி வந்துள்ளேன் (இரண்டாவது படம்)

அவர் நீண்ட வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். அதாவது அமெரிக்காவில் 'innocence' என்ற சட்டம் மூலம் சிறையில் நீண்ட வருடங்களாக அடைக்கப்பட்டிருப்பவர்கள் உண்மையில் குற்றவாளிகளா என்று கண்டறியப்பட்டு விடுவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பாலியல் குற்றவாளி என்று சிறை தண்டனை அனுபவித்து வந்த லியோனர்ட் மேக்கிற்கு டி.என்.ஏ.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது அந்த குற்றத்தை இவர் செய்யவில்லை என்று நிரூபணம் ஆனது. இதையடுத்தே அவர் மீதான தண்டனை ரத்து செய்யப்பட்டு சுமார் 47 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது 72 வயதில் லியோனர்ட் மேக் குற்றமற்றவர் என்று தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.

47 ஆண்டுகள் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம் அவர் வாழ வேண்டிய காலத்தில் சிறையில் கழிந்துவிட்டது. இனிமேல் அவருக்கு இழந்த வாழ்க்கையை யார் தருவார்? குற்றமற்றவர் என்று 72 வயதில் குற்றமற்றவர் என்று நிரூபணமாகி விடுதலை செய்யப்பட்ட அவருக்கு அந்த நாடு என்ன செய்யப்போகிறது?

தற்போது விடுதலை செய்யப்பட்டிருக்கும் லியோனர்ட் மேக், தான் இப்போது மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளதாகவும், சுதந்திரமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அமெரிக்காவின் தேசிய விடுதலை என்ற அமைப்பு இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில், "மொத்த அமெரிக்க மக்கள்தொகையில் கறுப்பின மக்கள் 13.6 % மட்டுமே என்றாலும், 1989 மற்றும் 2022 ஆண்டுகளுக்கு இடையில் தண்டனைகள் ரத்து செய்யப்பட்ட 3,300 பேரில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் கறுப்பின மக்கள் ஆவர்." என்று குறிப்பிட்டுள்ளது.

அதோடு 1989-ம் ஆண்டு புதிய DNA பரிசோதனையின் அடிப்படையில் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்ட 575 கைதிகள், குற்றமற்றவர்களாக தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களில் 35 பேர் மரண தண்டனைக்காகக் காத்திருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 10 Sep 2023 5:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...