/* */

இன்றைய வானிலை நிலவரம் என்ன? தெரிஞ்சுக்குவோமா..?

Indraya Vaanilai Arikkai-இன்றைய வானிலை நிலவரப்படி தமிழ்நாட்டுக்கு மழை பெய்யுமா என்பதை தெரிந்துகொள்வோம் வாங்க.

HIGHLIGHTS

Indraya Vaanilai Arikkai
X

Indraya Vaanilai Arikkai

Indraya Vaanilai Arikkai-அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள பைபர்ஜோய் புயல்" அடுத்த 6 மணிநேரத்தில் தீவிர புயலாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பைபர்ஜோய் புயல்" காரணமாக மகாராஷ்டிரா தொடங்கி கேரளா வரையிலான அரபிக் கடல் பகுதிகளில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கினாலும் கேரளா மற்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் 48 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தென்கிழக்கு அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்துள்ளது. இந்தப் புயலுக்கு பைபர்ஜோய் புயல்" என பெயரிடப்பட்டுள்ளது. வங்கதேசம் "பைபர்ஜோய் புயல்" என்ற பெயரை வழங்கியுள்ளது. பைபர்ஜோய் புயல்" என்றால் பேராபத்து என்பது பொருளாகும்.

தற்போது அரபிக் கடலில் உருவாகி உள்ள பைபர்ஜோய் புயல்" புயல் வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது. இந்த புயல் அடுத்த 6 மணிநேரத்தில் தீவிரமடைந்து வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலால் மகாராஷ்டிரா தொடங்கி கேரளா வரையிலான அரபிக் கடல் பகுதிகளில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக உருவானால், அதற்கு "பைபர்ஜோய் புயல்" என்று பெயர் வைக்கப்படும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா மற்றும் தமிழ்நாட்டில் வழக்கமாக ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கி விடும். ஜூன் 6ம் தேதி ஆன நிலையில் இதுவரை தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறியே இல்லை என்று இருந்த நிலையில் இப்போது புயலாக மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

பைபர்ஜோய் சூறாவளி குறித்து IMD சமீபத்திய எச்சரிக்கை

பைபர்ஜோய் புயல் இந்தியக் கடற்கரையை விட்டு விலகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பைபர்ஜோய் புயல் நேரடி தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது.

ஆனால், குஜராத் கடற்கரை அருகே மறைமுகமாக காற்றின் வேகம் தொடங்கும்... மத்திய அரபிக்கடலுக்கு ஜூன் 13ம் தேதி வரையிலும், வடக்கு அரபிக்கடலுக்கு ஜூன் 15ம் தேதி வரையிலும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி வருகிறோம்” என்று டிஜி ஐஎம்டி டாக்டர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா கூறினார்.

ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) ஜூன் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் வெப்ப அலைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்கு வங்கம், பீகார் உள்ளிட்ட கிழக்கு இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜூன் 11-13 இல் அதிக மழை பெய்யும் அதே பகுதியில் மேலும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பைபர்ஜோய் புயல் அடுத்த 36 மணி நேரத்தில் மேலும் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

மும்பைக்கு மேற்கு-தென்மேற்கே சுமார் 820 கிமீ தொலைவிலும், போர்பந்தரிலிருந்து 830 கிமீ தென்-தென்மேற்கிலும், கராச்சிக்கு தெற்கே 1120 கிமீ தொலைவிலும் பைபர்ஜாய் மையம் கொண்டிருந்தது. இது அடுத்த 36 மணி நேரத்தில் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதலாக, இன்று 0830 மணி நேர நிலவரப்படி மியான்மர் கடற்கரையில் வடகிழக்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி (LPA) உருவாகியுள்ளது. இந்த LPA அடுத்த 24 மணிநேரத்தில் நன்கு குறிக்கப்பட்ட குறைந்த (WML) ஆக நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 15 April 2024 6:30 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ரூ.9 லட்சம் கோடி தரவுகள் அழிந்தது எப்படி?
  2. தேனி
    தமிழகத்தின் ரோட்டோரம் கிடைக்கும் அமிர்தம்!
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தேனி
    தேனி, சோத்துப்பாறையில் கொட்டித்தீர்த்த மழை
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. திருநெல்வேலி
    தாமிரபரணி நதிக்கரையில் வைகாசி ஆரத்தி பெருவிழா!
  8. திருவள்ளூர்
    கஞ்சா போதையில் கண்டக்டரை தாக்கிய 3 இளைஞர்கள் கைது
  9. நாமக்கல்
    வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பள்ளி சிபிஎஸ்இ தேர்வுகளில் சாதனை
  10. வந்தவாசி
    வந்தவாசி அருகே நள்ளிரவில் தொடர் மின் தடை: பொதுமக்கள் மறியல்