/* */

14 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு

Heavy Rain Alert -தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்றும் (வியாழன்), நாளையும் (வெள்ளி) கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

14 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு
X

சென்னை வானிலை ஆய்வு மையம் 

Heavy Rain Alert -தென்மேற்கு பருவமழை முடியும் நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை அளவு சற்று குறைந்து இருந்தது. ஆனால் தற்போது தமிழகத்துக்கு மீண்டும் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

அதன்படி மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 9-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை மழைக்கான வாய்ப்பு உள்ளது.

அந்த வகையில் இன்று தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதனைத்தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கனமழை பெய்யும் மாவட்டங்கள்

இன்றும், நாளையும் மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 14 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

8-ந் தேதி (நாளை மறுநாள்) மற்றும் 9-ந் தேதி (திங்கட்கிழமை) என 2 நாட்கள் தமிழ்நாடு, புதுச்சேரியில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

குமரி கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனையொட்டிய தென் தமிழக கடலோர பகுதிகள், இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால், நாளை மறுநாள் (சனிக்கிழமை) வரை மேற்சொன்ன பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

மழை நிலவரம்

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், சின்கோனா, ஏற்காடு தலா 3 செ.மீ., மன்னார்குடி, தேவாலா, பார்வூட், மடத்துக்குளம், ஹரிசன் எஸ்டேட், செருமுள்ளி தலா 2 செ.மீ., நடுவட்டம், கூடலூர் பஜார், கல்லணை, தாளவாடி, பெரியநாயக்கன்பாளையம், பவானிசாகர், பெரியார், ராசிபுரம், சங்கரன்கோவில், தூத்துக்குடி, தத்தியெங்கர்பேட்டை, மேல்கூடலூர், பந்தலூர் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 6 Oct 2022 7:13 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?