கடகம் முதல் கன்னி ராசி வரையிலான 2023 ராசி பலன்கள்

கடகத்தில் பிறந்தவர்களுக்கு இவ்வாண்டு அஷ்டமத்து சனி உங்களை ஆட்டி படைக்க இருக்கிறது என்பதால் எதிலும் நிதானத்தை கை விடக்கூடாது. சந்திரனை ராசி அதிபதி ஆகக் கொண்டதால் மனக்குழப்பம் நீடிக்கும்.
பயணங்களின் பொழுது வேகம் தவிர்த்து விவேகத்தை கடைபிடிப்பது உத்தமம். சுய தொழிலில் உள்ளவர்கள் எத்தகைய தடைகளையும் தாண்டி வெற்றி நடை போடுவதற்கு வாய்ப்புகள் கிடைக்கும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை தேவை இல்லை என்றால் அவமானப்பட நேரலாம். அரசாங்க துறையில் பணி புரிய வேண்டும் என்று நினைப்பவர்கள், வெளிநாடு செல்ல வேண்டும் என்கிற கனவோடு இருப்பவர்களுக்கு எதிர்பார்ப்பது பூர்த்தி அடையும்.
பொருளாதாரம் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். கல்வி விஷயத்தில் புதிய முயற்சிகள் மேற்கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் அவ்வப் பொழுது சிறு சிறு பிரச்சனைகள் வந்து மறையுமே ஒழிய பெரிய பிரச்சினைகள் எதுவும் வராது எனவே கவலை கொள்ள வேண்டாம். பரிகாரமாக சனி பகவானை சனிக்கிழமைகளில் எள் தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள் நன்மைகள் நடக்கும்.
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இவ்வாண்டு சரிவில் இருந்த நீங்கள் கோபுரத்தின் உச்சிக்கே செல்லக்கூடிய அற்புதமான பலன்கள் நிறைந்த நல்ல ஆண்டாக அமையப் போகிறது. இதுவரை உங்களை ஆட்டி படைத்து கொண்டிருந்த துன்ப நிலை மாறும்.
குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றம் உயரும் என்பதால் புதிய புதிய ஒப்பந்தங்களில் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிடமாற்றம், சம்பள உயர்வு போன்றவற்றில் திருப்தியான மனநிலை இருக்கும்.
கல்வி விஷயத்தில் தைரியமாக முடிவெடுங்கள். வெளிநாடு செல்ல வேண்டும் என்பவர்கள் மே மாதத்திற்கு முன்னரே அதற்கான முக்கிய விஷயங்களை தயார் செய்வது நல்லது. ஆரோக்கியத்தில் சில சமயங்களில் சங்கடங்கள் வந்து செல்லும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
பரிகாரமாக பைரவருக்கு செவ்வரளி மலர்களை கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டு வாருங்கள் தடைகள் விலகும்.
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இவ்வாண்டு மங்கள காரியங்கள் குறைவில்லாமல் நடக்கக்கூடிய மகிழ்ச்சி நிறைந்த ஆண்டாக இருக்கப் போகிறது. திருமணம் தடைகள் விலகி கெட்டிமேளம் கைகூடும்.
சுய தொழிலில் உள்ளவர்களுக்கு இதுவரை இருந்து வந்த மந்தமான நிலை மாறும் மேலும் உங்களுடைய அயராத உழைப்பிற்கு ஏற்ற எதிர்பாராத பலன்களையும் அனுபவிக்க கூடிய நல்ல வாய்ப்புகள் உண்டாகும்.
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தீராத கடன் தொல்லைகள் தீர்வுக்கு வரும். பொருளாதாரம் உயர துவங்கும். மேற்படிப்பு விஷயங்களில் சிந்தித்து எந்த ஒரு முடிவையும் எடுப்பது நல்லது. வெளிநாடு செல்லும் விஷயத்தில் சாதகமான பலன்கள் உண்டு என்றாலும் கவனமுடன் எதையும் கையாளுவது நல்லது.
ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காண கூடுதல் அக்கறையுடன் இருப்பது உத்தமம். பரிகாரமாக சனிக்கிழமைகளில் விரதம் இருந்து விஷ்ணு ஆஞ்சநேயர் நரசிம்மர் போன்ற கடவுளை வணங்கி பலன் பெறலாம்.