சாலையில் படுத்திருந்த ராட்சத பாம்பு...தரமான சம்பவம்..!

வீடியோவில், நபர் ஒருவர் வாகனத்தில் இருந்து இறங்கி, சாலைக்கு நடுவே கிடக்கும் பாம்பை நோக்கி செல்கிறார். மேலும், பாம்பின் வாலை பிடித்த அந்த நபர், அதனை காட்டை நோக்கி நகர்த்தி போடுகிறார். உடனடியாக, அந்த பாம்பும் அங்கிருந்து வேகமாக ஊர்ந்து காட்டுக்குள் செல்கிறது.
இதனை பகிர்ந்த அதிகாரி பர்வீன் கஸ்வான்,தென் இந்திய பகுதியில் உள்ள காட்டில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மிகவும் சாதாரணமாக நடு ரோட்டில் சென்று பாம்பை சாலையில் இருந்து அகற்றும் நபர் தொடர்பான வீடியோ, பார்ப்போர் பலரையும் சில்லிட வைத்துள்ளது.