/* */

வார விடுமுறையில் அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள்: களைகட்டிய குற்றாலம்

வார விடுமுறை நாளான இன்று அருவிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் குற்றாலம் களைகட்டி காணப்படுகிறது.

HIGHLIGHTS

வார விடுமுறையில் அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள்: களைகட்டிய குற்றாலம்
X

குற்றாலத்தில் வார விடுமுறை நாளான இன்று அருவிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் குற்றாலம் களைகட்டி காணப்படுகிறது.

குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ள நிலையில் வார விடுமுறை நாளான இன்று அருவிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் குற்றாலம் களைகட்டி காணப்படுகிறது.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் குற்றால அருவிகள் அமைந்துள்ளது. குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் சீசன் காலகட்டமாகும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்னதாக தொடங்கிய நிலையில் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இரண்டு ஆண்டுகளாக தொற்று பரவல் காரணமாக குற்றால அருவிகளில் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் முன்னதாகவே நீர்வரத்து தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிகளில் குவிய தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக அருவிகளில் கரையோர சாலை வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 21 May 2022 1:57 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?
  2. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  3. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  4. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  5. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  6. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  7. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  9. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  10. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது