/* */

குமரியில் சுற்றுலா படகுகள் வரும் 20 ஆம் தேதி வரை ரத்து

குமரியில் சுற்றுலா படகுகள் வரும் 20 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது.

HIGHLIGHTS

குமரியில் சுற்றுலா படகுகள் வரும் 20 ஆம் தேதி வரை ரத்து
X

தமிழகத்தில் ஒமிக்ரான் மற்றும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், கன்னியாகுமரியில் சுற்றுலா படகுகள் இயக்கம், வரும் 20 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டு உள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

இதனிடையே, ஏற்கனவே வியாபாரம் இன்றி வாழ்வாதாரம் இழந்து காணப்படும் நிலையில், சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு சுற்றுலா பயணிகள் அதிகமாக வருவார்கள் என்பதால் அரசு பேருந்துகள் ரயில்கள் பயணத்தில் 50 % இருக்கைகள் உள்ளிட்ட கொரோனா கட்டுபாடுகளை கடைபிடிப்பது போல, சுற்றுலா படகுகளை இயக்கினால் சுற்றுலா பயணிகளுக்கும் ஏமாற்றம் இருக்காது; உள்ளூர் சிறு குறு நடைபாதை கடை வியாபாரிகளுக்கும் வாழ்வாதாரம் பாதிக்காது என, சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 12 Jan 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்