/* */

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு, அருவிகளை திறக்க முன்னேற்பாடுகள் தீவிரம்

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது, அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளை அனுமதிக்க முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு, அருவிகளை திறக்க முன்னேற்பாடுகள் தீவிரம்
X

குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரிப்பு

தென்காசி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.


குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி, பழைய குற்றாலம் என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக கொட்டுகிறது.

இந்நிலையில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குற்றால அருவிகளை திறப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. சுற்றுலாப் பயணிகள் சமூக விலக்கலை கடைப்பிடிக்க அருவி பகுதிகளில் வட்டம் வரையப்பட்டு உள்ளது.

அதேபோல் பழுதடைந்த மின்சார கம்பங்களில் உள்ள மின் விளக்குகளை மாற்றும் பணிகளும் நடைபெற்று முடிந்துள்ளது. எனவே கூடிய விரைவில் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On: 10 Oct 2021 3:31 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவின் தேசிய பறவை மயிலை கொன்றால் எத்தனை ஆண்டு சிறைத்தண்டனை...
  2. இந்தியா
    இந்தியாவின் தேசிய விலங்கு புலிகள் ஊருக்குள் புகுவது ஏன்?
  3. கரூர்
    கரூர் எம்பி தொகுதியில் இதுவரை ரூ1.35 கோடி பணம் பரிசு பொருள் பறிமுதல்
  4. கோவை மாநகர்
    ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம் கொடுத்தது குறித்து அண்ணாமலை விளக்கம்..!
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் வாக்களிக்க நூதன வரவேற்பளித்த அரசு அதிகாரிகள்..!
  6. குமாரபாளையம்
    புனித வெள்ளியையொட்டி நடந்த சிலுவைப்பாதை..!
  7. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  8. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  9. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
  10. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...