/* */

குற்றாலத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு குளிக்க தடை: ஆட்சியர் உத்தரவு

இன்று முதல் 3 நாட்கள் குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

குற்றாலத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு குளிக்க தடை: ஆட்சியர் உத்தரவு
X

குற்றாலம் மெயின் அருவி.

தென்காசி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் இன்று முதல் மூன்று நாட்கள் குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் குற்றால அருவி கரை வெறிச்சோடி காணப்படுகிறது.

பல மாதங்களுக்கு பிறகு கடந்த 20ஆம் தேதியன்று குற்றாலம் ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அருவிகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சமூக இடைவெளியை கடைபிடித்து சுற்றுலா பயணிகள் குளிக்கலாம் என்ற அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டது. அதன்படி நாள்தோறும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குளித்து சென்றனர்.

இந்த நிலையில் ஓமிக்ரான் அச்சம் காரணமாகவும் விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகரிக்க கூடும் என்பதை கருத்தில் கொண்டும் இன்று முதல் மூன்று நாட்களுக்கு குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் குளிக்க தடை விதிப்பதாக தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தர்ராஜ் தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்று முதல் இந்த தடை மூன்று நாட்கள் தொடரும். இதனை அடுத்து அருவிக்கரையில் பதாகைகள் வைத்து வழி மூடப்பட்டுள்ளது மே.லும் அருவிகளில் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால் அருவிக்கரை வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் இங்குள்ள வியாபாரிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்

Updated On: 31 Dec 2021 1:20 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு, மறுவாக்குப்பதிவு இல்லை: தேர்தல்...
  2. தென்காசி
    சீரான குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் : போக்குவரத்து...
  3. தொழில்நுட்பம்
    கையில் அடங்கும் புதிய அதிசயம் - Vivo V30e
  4. தொழில்நுட்பம்
    கலக்கும் Nothing Phone 2..! சூப்பர் அப்டேட் அப்பு..!
  5. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 10ம் வகுப்பு மாணவன்...
  7. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  8. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  9. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  10. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!