/* */

இதே ஜூலை 31 இந்தியாவில் முதன் முதலில் செல்போன் சேவை துவக்கி வைக்கப்பட்ட தினம்

இந்தியாவில் முதன் முதலில் செல்போன் சேவை துவக்கி வைக்கப்பட்ட தினம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இன்ஸ்டாநியூஸ் வாசகர்களுக்காக

HIGHLIGHTS

இதே ஜூலை 31 இந்தியாவில் முதன் முதலில் செல்போன் சேவை துவக்கி வைக்கப்பட்ட தினம்
X

இதே ஜூலை 31 இந்தியாவில் முதன் முதலில் செல்போன் சேவை துவக்கி வைக்கப்பட்ட தினம்

1995 ஆம் ஆண்டு இதே நாளில் முதன் முதலாக மக்களுக்கான செல் போன் சேவை – கொல்கத்தா நகரில் துவங்கியது. 1995 ஜூலை 31 அன்று கொல்கொத்தா நகரில் நடைபெற்ற விழாவில் அன்றைய மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் சுக்ராம் அவர்கள், மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு அவர்களுடன் முதல் செல்போன் மூலம் பேசி தொடங்கி வைத்தார்.

மோதி - டெல்ஸ்ரா என்கிற இந்திய ஆஸ்திரேலிய கூட்டு வர்த்தக நிறுவனம் இந்த சேவையை வழங்கியது. அதற்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதமே இது வாடிக்கையாளர் பயன்பாட்டுக்கு வந்தது

நான் சொல்ல வந்த விசயத்தையே சொல்லாமல் எதையோ சொல்லிக்கொண்டு இருக்கேன். இந்தியாவில் செல்போன் சேவை 1995 ம் ஆண்டு தொடங்கபட்டது.இப்போது பதினேழு வருடம் ஆகிவிட்டது. 31.08.1995 அன்று முதல் மொபைல் டெல்லியில் சேவை தொடங்கியபோது முதன் முதலாக அன்றைய மேற்கு வங்காள முதல்வர் ஜோதிபாசுவை டெல்லியில் இருந்த மத்தியஅமைச்சர் சுக்ராம் தொடர்பு கொண்டு பேசினார்.இவங்க தாங்க இந்தியாவில் முதலில் மொபைல் பேசினது...

அன்றைக்கு அவர்கள் பயன்படுத்திய செல்போன் விலை 50 ஆயிரம் ரூபாய் கேட்கவே காமெடியா இருக்கு அப்ப கேமரா கூட இல்லாமல் வைத்து இருந்த மொபைல் ஐம்பது ஆயிரம் என்றால் அப்ப நினைத்து கூட பார்க்காத பல வசதியை கொண்ட ஆப்பிள்,ஆன்ட்ராய்ட் எல்லாம் பற்றி என்னத்த சொல்ல...


ஒரு செல்போனில் இருந்து இன்னொரு செல்போனுக்கு அவுட்கோயிங் கால் செய்ய நிமிடத்திற்கு 17 ரூபாய்கட்டணமாய் வசூக்கபட்டது. வெளியில் இருந்து incomimg call க்கு கூட 8 ரூபாய் கட்டணமாக வசூல் (வசூல் ராஜாவா இருந்து இருப்பானுங்க போல) செய்யப்பட்டது... இது மட்டும் இல்லாமல் மாதம் மாதம் 600 ரூபாய் மாதகட்டணமாய் செலுத்த வேண்டியும் இருந்தது. அப்ப நினைத்து பாருங்க இப்ப மொபைல் நிறுவனம் நமக்கு தெரியாமல் பத்து ரூபாய் எடுத்து கொண்டால் கூட என்ன ஒரு கோபம் வருது அந்த டைம் எவ்வளவு ரூபாய் மாத கட்டணம் INCOMING,OUTGOING பணம் வசூல் செய்து உள்ளனர்.

மிக பெரிய பணகாரர்கள்(அவனுங்க கூட அழுது இருப்பாங்க) மட்டும் பயன்படுத்தும் நிலையில் இருந்த மொபைல் போன் இன்று கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்துபவர்கள் கூட பயன்படுத்தும் அளவிற்கு வந்துவிட்டது...இந்த நிலை 2009 அப்புறம் தான் மாறியது 17 ரூபாய் இருந்த OUTGOING CALL வசதி 50 பைசா,10 பைசா என வந்து இப்போ முற்றிலும் இலவசம் என வந்துவிட்டது இப்ப பைசா கூட செல்லாது...இப்ப ரோமிங் சேவை கூட இலவசமாய் மாற போகிறது...

அப்போது ஐம்பது ஆயிரத்தில் இருந்த மொபைல் இப்ப ஆயிரம் ரூபாயில் வாங்கலாம் அப்போ இன்னும் ஒரு பத்து ஆண்டு சென்றால் ஆப்பிள் ஆயிரம் ரூபாய்க்கு வாங்கும் நிலை வந்துவிடும்மோ என்னவோ...

இப்போது இந்தியாவில் உள்ள இரண்டு மொபைல் சேவை 1.G.S.M(GLOBAL SYSTEM FOR MOBILE) 2.C.D.M.A(CODE DIVISION MULTIPLE ACCESS) GSM தொழில்நுட்பம் தமிழ்நாட்டில் AIRCEL,AIRTEL,VODAFONE மற்றும் BSNL நிறுவனங்கள் வழங்கிவருகின்றன இதில் AIRTEL வழங்கியதை அப்படியே திரும்ப எடுத்து கொள்வான்.CDMA தொழில்நுட்பத்தை ரிலையன்ஸ்,TATA,VIRGIN வழங்கி வருகிறது இதில் ரிலையன்ஸ் திரும்ப எடுத்து கொள்வான்...

செல்போன் சேவை வெற்றிக்கு முக்கியமான காரணம் 1999 ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட வருமானத்தை பங்கிட்டுகொள்ளும் முறை அமலுக்கு வந்தது தான். இதன் படி மொபைல் வர்த்தகத்தில் கிடைக்கும் லாபத்தை செல்போன் சேவை வழங்கும் ஆப்பரேட்டர்களும் அரசும் பங்கு போட்டு கொள்ளும் மற்றும் ஒரு காரணம் CDMA தயாரிப்புகள் இந்தியாவில் அறிமுகம் ஆனது தான். இந்த இரண்டு காரணமும் மொபைல் சேவை இந்தியாவில் மிக பெரிய வெற்றி அடைய காரணம் ஆகும்.இன்று இந்தியாவில் மட்டும் SMS அனுப்புவதில் மாதம் ஒன்றுக்கு 500 கோடிக்கு மேல் அனுப்பபடுகின்றது.

1995 TO 1999வரை இந்தியாவில் 12 லட்சம் செல்போன் உபயோகத்தில் இருந்தது. செல்போன் விலை குறைப்பால் 2001ம் ஆண்டு 54 லட்சம் செல்போன் விற்பனையானது. 2003 ம் ஆண்டு மொபைல் போன்களுக்கு வரும் இன்கம்மிங் கால்கள் இலவசம் என அறிவிக்கபட்டது. அந்த கால கட்டத்திலேயே CDMA என்னும் தொழில்நுட்பம் அறிமுகம் ஆனது.

இதனால் செல்போன் வைத்து இருபவர்களின் எண்ணிக்கை 1கோடியே 25 லட்சமாய் உயர்ந்தது. இந்தியாவில் தற்போது 952 MILLION செல்போன் உபயோகத்தில் உள்ளது.செல்போன் அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இரண்டாம் இடத்தில் உள்ளது.இந்த வளர்ச்சிக்கு மற்றும் ஒரு முக்கிய காரணம் மொபைல் இணைய சேவையும் ஒரு காரணம்...

Updated On: 31 July 2021 7:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  2. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  3. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  5. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  6. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  9. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  10. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!