/* */

ஜியோ நிறுவனத்தின் புதிய சேவை அறிமுகம்

ஜியோ நிறுவனம் புதிய சேவையினை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோ வாடிக்கையாளர்கள் வாட்ஸ் அப் வழியாகவும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்

HIGHLIGHTS

ஜியோ நிறுவனத்தின் புதிய சேவை அறிமுகம்
X

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சேவை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் படி ஜியோ வாடிக்கையாளர்கள் இப்போது வாட்ஸ் அப் வழியாகவும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு அதிகரித்ததை தொடர்ந்து தற்போது ரீசார்ஜ் செய்வது துவங்கி EB பில், பண பரிமாற்றம் ஆகியவற்றை எளிதாக செய்து கொள்ள முடிகிறது. அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு சில அதிரடியான சேவைகளை அறிவித்துள்ளது.

அதன் படி ஜியோ பயனர்கள் போன் ரீசார்ஜ், ஜியோ இணைய சேவை, ஜியோ ஃபைபர் மற்றும் ஜியோ சிம் ஆகியவற்றை வாட்ஸ்அப் வழியாகப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. அந்த சேவைகளை பெற்றுக்கொள்ள ஜியோ சிம் பயனர்கள், ரிலையன்ஸ் ஜியோ வழங்கிய எண்ணை சேமித்து வாட்ஸ் அப் சேவைகளை துவங்க வேண்டும். இதன் மூலம் ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள் Paytm, PhonePe, Google Pay, Amazon Pay போன்றவற்றில் ரீசார்ஜ் செய்யும் முறைகளை வாட்ஸ் அப் வழியாகவும் நிறைவேற்றிக் கொள்ளலாம்.

இதற்கு முதலாவதாக,

ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் தங்கள் தொலைபேசியில் ஜியோ கேரின் 7000770007 எண்ணை சேமிக்க வேண்டும். பிறகு அந்த வாட்ஸ்அப் எண்ணுக்கு 'ஹாய்' என மெசேஜ் அனுப்ப வேண்டும். பின்னர் Main Menu விருப்பம் வாட்ஸ் அப் வழியாக அனுப்பப்படும். அதில் 'ஜியோ சிம் ரீசார்ஜ்' விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த சேவைகள் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் இருக்கும். இதில் நீங்கள் விரும்பும் மொழிகளை சேர்த்து கொள்ளலாம்.

தொடர்ந்து வாட்ஸ்அப் வழியாக ரீசார்ஜ் செய்யும் போது, ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கப்படும். இதில் நீங்கள் விரும்பும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை தேர்ந்தெடுத்ததும், பணம் செலுத்துவதற்கான ஜியோவின் அதிகாரப்பூர்வ வலைதளம் திறக்கும். பிறகு அதற்கான பணத்தை நீங்கள் செலுத்தி சேவைகளை பெற்றுக்கொள்ளலாம். மேலும் புதிய ஜியோ சிம் அல்லது Port-In (MNP) உள்ளிட்ட பல சேவைகளை வாட்ஸ் அப் வழியாக பெறலாம். இது தவிர ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்ள் கொரோனா குறித்த தகவல்களை வாட்ஸ் அப் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Updated On: 11 Jun 2021 9:10 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  2. ஈரோடு
    அந்தியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 10ம் வகுப்பு மாணவன்...
  3. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  4. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  5. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  6. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  7. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  8. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  9. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  10. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!