/* */

அடுத்த தலைமுறை வானியல் செயற்கைக்கோளை தயாரிக்க இஸ்ரோ திட்டம்

அடுத்த தலைமுறை வானியல் செயற்கைக்கோளை உருவாக்கும் சாத்தியத்தை ஆராய்ந்து வருவதாக இஸ்ரோ உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்

HIGHLIGHTS

அடுத்த தலைமுறை வானியல் செயற்கைக்கோளை தயாரிக்க இஸ்ரோ திட்டம்
X

வானியலின் நோக்கத்திற்காக இஸ்ரோவின் முதல் செயற்கைக்கோள், ஆஸ்ட்ரோசாட், செப்டம்பர் 28, 2015 அன்று விண்ணில் ஏவப்பட்டது.அதன் ஆயுட்காலம் ஐந்து ஆண்டுகள் தான் என்றாலும் இன்னும் செயல்பாட்டில் உள்ளது.

"ஆஸ்ட்ரோசாட் இன்னும் சில ஆண்டுகள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்", என அப்போதைய இஸ்ரோவின் தலைவராக மிஷன் குழுவை வழிநடத்திய, தற்போது விண்வெளி நிறுவனத்தில் உயர்மட்ட அறிவியல் குழுவின் தலைவராக பணியாற்றும் ஏஎஸ் கிரண் குமார் கூறினார்,

"இன்னும் சில முக்கிய முடிவுகள் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கலாம். ஆஸ்ட்ரோசாட் -2 அல்ல. அடுத்த தலைமுறை செயற்கைக்கோள் பற்றிய திட்டமிடுதலில் இருக்கிறோம் என கூறினார்.

ஐந்து தனித்துவமான எக்ஸ்ரே மற்றும் புற ஊதா தொலைநோக்கிகளைக் கொண்ட பல அலைநீள விண்வெளி ஆய்வுக்கூடம், பூமியிலிருந்து 9.3 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள AUDFs01 எனப்படும் விண்மீன் மண்டலத்திலிருந்து தீவிர-புற ஊதா ஒளியைக் கண்டறிந்தது.

புனேயின் இன்டர்-யுனிவர்சிட்டி சென்டர் ஃபார் அஸ்ட்ரோனமி மற்றும் வானியல் இயற்பியலில் (IUCAA) டாக்டர் கனக் சாஹா தலைமையிலான சர்வதேச வானியலாளர்கள் குழுவால் இந்த கண்டுபிடிப்பு செய்யப்பட்டது மற்றும் 'நேச்சர் அஸ்ட்ரானமி இதழிலும் வெளிவந்துள்ளது. இந்த குழுவில் இந்தியா, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் நெதர்லாந்து விஞ்ஞானிகள் அடங்குவர்.

ஒரு கருந்துளை அமைப்பிலிருந்து அதிக ஆற்றலின் (குறிப்பாக> 20 கேவி) எக்ஸ்-ரே உமிழ்வை ஆஸ்ட்ரோசாட் முதன்முறையாக கண்டறிந்துள்ளது என அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

"ஆஸ்ட்ரோசாட் மிகவும் வெற்றிகரமான பணியாகும், அது உலகளவில் பாராட்டப்படும் பல்வேறு தகவல்களை அளித்துள்ளது. மேலும் அதிக எண்ணிக்கையிலான ஆவணங்களும் வெளியிடப்பட்டுள்ளன என கிரண்குமார் கூறினார்.

Updated On: 2 Oct 2021 9:12 AM GMT

Related News